தரங்கம்பாடி, ஆக.9- மயிலாடுதுறை அருகேயுள்ள வரதப்பட்டு ஊராட்சி திருவா ளப்புத்தூரில் 14 வயது சிறுமி காமக் கொடூரக் கும்பலால் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தற்போது அச்சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. சிறுமியை சீரழித்த அனைவரையும் கைது செய்து வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற க்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மயிலாடு துறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அக்கட்சியின் மா.ஈழவளவன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.