மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்துள்ள ஏழை, மக்களை வஞ்சிக்கும் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.ரவி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், டி.பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.பாலாஜி, என்.கங்காதரன், கே.ரமா உட்பட பலர் பேசினர்.