tamilnadu

img

கொக்கிப்புழு தாக்குதலால் மாடுகள் இறப்பு கொள்ளிடம் விவசாயிகள் வேதனை

சீர்காழி, மே 20- கொள்ளிடம் பகுதியில் கொக்கிப் புழு தாக்குதலால் மாடுகள் இறந்து வருவது விவசாயி களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் பகுதி யில் சமீபத்தில் பெய்த மழை நீர் மற்றும் பம்ப்செட்டு நீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. மேய்ச்சலுக்கு அந்தந்தப் பகுதிக்கு செல்லும் மாடுகள் தேங்கியுள்ள தண்ணீரைச் சுற்றியுள்ள புல்லை மேயும் போது வயிற்றுக்குள் கொக்கிப் புழுக்கள் சென்று விடுகிறது. இதனால் மாடுகள் உயிரிழக்கின்றன.  இந்நிலையில் கொள்ளிடம் அருகே சாமியம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சரவணன்(45) என்பவருக்கு சொந்தமான இரண்டு பசு மாடுகள் செவ்வாயன்று இறந்து விட்டன.

இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை மண்டல கால்நடை உதவி இயக்குநர் முத்துக்குமாரசாமி கால்நடை மருத்துவர் சரவணன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் சாமியம் கிராமத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  பின்னர் உதவி கால்நடை இயக்குநர் முத்துக்குமாரசாமி கூறுகையில், கொக்கிப்புழு தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே மருந்து கொடுத்து கட்டுப்படுத்த முடியும். இந்த கொக்கிப் புழு ஈரலை தாக்கும். பின்னர் தொடையின் கீழ் வீக்கம் ஏற்படும். தற்பொழுது தாக்கப்பட்ட மாடுக ளுக்கு சிகிச்சையளிக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இது பரவக்கூடிய நோய் இல்லை. கொக்கிப்புழு தாக்குதலுக்கு ஆளாகி இறந்த மாடுகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். கொக்கிப்புழு தாக்கு தலை முழுமையாக கட்டுப்படுத்த கால்நடை மருத்துவத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டு மென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.