tamilnadu

அரசு ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி

சீர்காழி, ஆக.2- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவ லர்கள், அனைத்து ஊழி யர்கள் மற்றும் நல்லூர் கொள்ளிடம் அரசு ஆரம்ப  சுகாதார மையங்களில் பணி புரிந்து வரும் மருத்துவ அலு வலர்கள் மற்றும் ஊழி யர்கள் உள்ளிட்ட 66 பே ருக்கு நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார மருத்துவ அலுவ லர் பபிதா தலைமையில், கொ ரோனா மருத்துவ பரி சோதனை செய்யப்பட்டது. இதில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வரும் ஒருவருக்கும், நல்லூர் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் நடமாடும் மருத்து வக் குழுவைச் சேர்ந்த ஒரு வருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் தனி மைப்படுத்தப்பட்டு மயிலா டுதுறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்க ப்பட்டனர். ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அதன் அருகே அமைந்துள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் வட்டார சேவை மையம், வட்டார கல்வி அலுவலகம் ஆகியவை மூடப்பட்டன.