tamilnadu

img

ஹாங்காங் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்  காலிறுதியில் கிடாம்பி

 ஹாங்காங்கில் யோனெக்ஸ் ஓபன் என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.  ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், சவுரப் வர்மாவை (இந்தியா) எதிர்கொண்டார். இரு வருமே ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் பலத்த எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-11, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துடன் காலிறுதிக்கு முன்னேறினார்.  மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரனோய், இந்தோனேசியாவின் ஜோனதனிடம் 21-12, 21-19  என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்துவெளியேறினார்.