tamilnadu

img

பெரம்பலூரில் பணி நிறைவு பாராட்டு விழா

பெரம்பலூர், மே 30-தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் கிளை இணைச் செயலாளரும், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளருமாகிய ரெ.இராஜகுமாரன் மின்வாரிய பெரம்பலூர் கிளையில் பணி புரிந்து வயதுமூப்பு காரணமாக 31-ம் தேதி பணி நிறைவு பெறுகிறார். இதனையொட்டி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழாபெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள பூமணம் திருமண மண்டபத்தில் வியாழன்று நடைபெற்றது.மாநில துணைத்தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். மாநிலசெயற்குழு உறுப்பினர் எம்.பன்னீர் செல்வம் வரவேற்றார். சிஐடியு மாவட்டசெயலாளர் ஆர்.அழகர்சாமி, தவிசமாவட்ட செயலாளர் என்.செல்லதுரை,மின்ஊழியர் மத்திய அமைப்பு மாநில பொருளாளர் டி.கோவிந்தராஜீ, திருச்சி மண்டல செயலாளர் எம்.பன்னீர்செல்வம், மாநில துணைத்தலைவர் எஸ்.ரெங்கராஜன், ஓய்வு பெற்றோர்நல அமைப்பு ஜி.பஷீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டுக்குழு எஸ்.ஸ்ரீதர், மாநிலக்குழு எம்.சின்னதுரை, எம்.ஜெயசீலன், மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், கூடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திராவிடர்மணி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா, சிஐடியுமாநில செயலாளர் பி.கருப்பையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் ஏற்புரை வழங்கிய ரெ.இராஜகுமாரன் மார்க்சிஸ்ட் கட்சி நிதியாக 50 ஆயிரம் மற்றும் மின்கதிர் வளர்ச்சி நிதியாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்கினார். அவரது மனைவி அ.சின்னம்மாள் பகுதி சுகாரதார செவிலியர் ஓய்வு வட்ட தலைவர் கே.கண்ணன், சிபிஎம்வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வட்ட பொருளாளர் வி.தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

;