பெரம்பலூர், ஜூலை 29- ஆணவப் படுகொலையை கண்டித்து பெரம்பலூரில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். எம்பி தொகுதி செயலாளர் தமிழாதவன், துணை செயலாளர் மன்னர்மன்னன், மாவட்ட பொருளாளர் கலையர சன், வக்கீல்கள் ஸ்டாலின், ரத்தினவேல் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் இளமாறன், மாநில செயலா ளர் வீரசெங்கோலன், மண்டல செயலாளர் இரா.கிட்டு, மாநில துணை செயலாளர் தமிழ்க்குமரன், வக்கீல் அண்ணா துரை பேசினர். தொகுதி செயலாளர் செல்வமணி, ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், இடிமுழக்கம், வெற்றியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய செயலா ளர் பாஸ்கர் வரவேற்றார். நகர செயலாளர் தங்க சண்முக சுந்தரம் நன்றி கூறினார்.