பெரம்பலூர், ஜுலை 7- பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பாலை முழுவ துமாக கொள்முதல் செய்ய வேண்டும், பயிர்க்கடன் பால் மாட்டுக்கடன் வழங்க வேண்டும். கிணறு வெட்ட கடன் உதவி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்க கூட்ட மைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோ ரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் என்.செல்லதுரை தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், கொரோனா நோய்தொற்று காரணமாக பொது முடக்கத்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியா ளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானம் இழந்த நிலையில், பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பாலை முழுவதுமாக கொள்முதல் செய்யாமல், கூட்டுறவு சங்கங்கள் பாதிக்கும் மேல் பாலை திருப்பி அனுப்பி விடுகின்றன. இத னால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுள்ளனர். எனவே பாலை முழுவதுமாக கொள்முதல் செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.