பெரம்பலூர், டிச.9- பெரம்பலூர் மாவட்டத்தில் 1,237 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்த லுக்கான வேட்பு மனுத் தாக்கல் திங்கள் கிழமை துவங்கியது. முதல் நாளில் 38 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக வரும் 27ம் தேதி பெரம்ப லூர், வேப்பூர் ஒன்றியங்களில் 4 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்கள், 37 ஒன்றிய கவுன்சிலர் பதவி, 53 ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் 462 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியி டங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக வரும் 30-ம் தேதி வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களுக்குட்பட்ட 4 மாவட்ட கவுன்சிலர் பதவி, 39 ஒன்றிய கவுன்சி லர் பதவி, 68 ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் 570 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந் தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிக ளுக்கும், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு திங்களன்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இதற்காக அலுவலகங்களில் தேர்தல் அலுவலர்கள் தயார் நிலை யில் இருந்தனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுத் தாக்கலின் போது டெபாசிட் தொகையாக மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ரூ. ஆயிரமும், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ரூ. 600, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ. 200 செலுத்த வேண்டும். இத்தேர்தலில் போட்டியிடு வோரிடமிருந்து வேட்பு மனுத் தாக்கல் துவங்கியதில் பெரம்பலூர் ஒன்றி யத்தில் 8 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பத விக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பத விக்கும், வேப்பூர் ஒன்றியத்தில் 17 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 36 பேர் வேட்பு மனு செய்துள்ளனர். இதே போல் ஆலத்தூர் ஒன்றியம், புஜயங்கராய நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் நாளில் 38 பேர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.