tamilnadu

மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக்.19-  மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங் கம், சிபிஐ ஒன்றிய செயலாளர் நா. தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர்கள் சிபிஎம் மணிவேல், சிபிஐ வீஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாநிலக்குழு எம்.சின்ன துரை கண்டன உரையாற்றினார். சிபிஎம் பி.ரமேஷ், எ.கலையரசி, ஆர். முருகேசன், சி.சண்முகம், ஆர்.இராஜகுமாரன், பி.கிருஷ்ணசாமி சிபிஐ அ.ராஜேந்திரன், கலைச் செல்வன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

;