மன்னார்குடி, நவ.25- மன்னார்குடி சுற்றுவட்டார பகுதி களில் அடிக்கடி நிலவி வரும் குறைந்த மின்னழுத்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மன்னார்குடி தொகு தியில் புதிய மின் நிலையங்களை நிறுவ துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார்குடி சட்டமன்ற உறுப்பி னர் டி.ஆர்.பி. ராஜா தமிழக அரசை வலி யுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு: தற்போது மன்னார் குடி நகரத்தில் உள்ள பீடிங் சிஸ்டம் ஓவர் லோடு ஆகும் சிக்கல் நிலவி வரு கிறது. இந்நிலையில் மூவாநல்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து மன்னார்குடி, வடபாதி, சித்தேரி போன்ற 33 கிலோவாட் மின் நிலையங்களுக்கு மின் விநியோகம் நடந்து வருகின்றது. தற்போது நெடுவாக்கோட்டை ஊராட்சியில் இடம் தேர்வு செய்யப் பட்டு விரைவில் மூவாநல்லூரிலிருந்து இணைப்பு பெற்று ஒரு மின் நிலைய மும், வடுவூரிலிருந்து இணைப்பு பெறப்பட்டு எடமேலையூரில் 33 கிலோ வாட் மின் நிலையமும் அமையவி ருக்கிறது. இப்பணிகளை அரசு துரிதப் படுத்த வேண்டும். இப்பகுதிகளில் புதிய மின் நிலை யங்கள் அமையப் பெற்றால் சீரான மின் விநியோகம் கிடைக்கும். குடி யிருப்புகள் வணிக, வர்த்தக நிறுவ னங்கள் மட்டுமல்லாது முக்கியமாக விவசாய ஆழ்குழாய் பாசனத்தின் மின்சார பயன்பாட்டிற்கு அடிக்கடி நான் சட்டமன்றத்தில் வலியுறுத்தி வருகி றேன். இந்த துணை மின் நிலையங்களு க்கு தேவையான நிலத்தை கையகப் படுத்துவதில் மாவட்ட வருவாய் நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாக தெரிகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்த வேண்டும். இப் பகுதிகளில் வசிக்கும் கிராமப்புற மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை நமது 76678-67899 என்ற தொலைபேசி மூலமாகவோ சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு கடிதங்கள் மூலமா கவோ தெரிவிக்கலாம் என டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ கூறியுள்ளார்.