tamilnadu

img

சிபிஎம் தலைவருக்கு ‘சிறந்த சமூக சேவகர்’ விருது....

மீலாது விழா பேரவை, வாலிபர்கள் முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லீம்லீக் மற்றும் அனைத்து ஜமாத்தார்கள் இணைந்து பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை நிஸ்வான் மண்டபத்தில் மீலாது மற்றும் மத நல்லிணக்க விழா நடத்தினர்.

விழாவிற்கு உலமா சபை தலைவர் முகமது முனீர் தலைமை வகித்தார். தலைமை இமாம் முகமதுசல்மான், ஏ.எஸ்.தாஜூதீன் முன்னிலை வகித்தனர். உசேன்முகமது ஆசிரியர், தலைமை இமாம்
முகமதுமுஸ்தபா, முகமதுஅப்துல்ஹக், மாவட்ட தலைவர் அப்துல்ஹாதி, முகமதுபைசல், டாக்டர் ஆசிக்அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை தலைவர் காஜாமொய்தீன், மவுலானா மவுளவி ஜீபைர் அகமது ஆகியோர் மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர். விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளருமான என்.செல்லதுரைக்கு ‘சிறந்த சமூக சேவகர்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மீலாதுநபி விழாவில் மாணவ-மாணவிகளுக்கான பேச்சுபோட்டி, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

;