tamilnadu

img

ஆல்மைட்டி வித்யாலயா  பள்ளியில் ஆண்டு விழா

 பெரம்பலூர், டிச.23- பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் 5வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் சிவகாமி வர வேற்றார். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஆ.ராம்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மைகுரு எஜிகே சன் கண்சல்டன்சி நிர்வாகி செந்தில்குமார் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். பள்ளியின் துணை முதல்வர் சாரதா செந்தில்குமார், ஆசிரி யைகள் ஹேமா, சந்திரோதயம், பள்ளியின் செயலாளர் இரா.சிவக்குமார் பங்குதாரர்கள் சி.மோகனசுந்தரம் மற்றும் மாணவ-மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.