மீரட், டிச.24- மக்களை பிளவுபடுத்தும் வகை யில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி களும் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்களும் தொடர் போராட் த்தை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 16 பேர் பலியாகினர். இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத் தில் பலியானவர்களின் குடும்பத்தி னரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக செவ்வாயன்று உத்தர பிரதேச மாநி லம் மீரட் நகருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் பொதுச்செய லாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகி யோர் வந்தனர். ஆனால், அவர்களை நகருக்குள் நுழையவிடாமல் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.