கேரளாவில் உள்ள இடுகி, பாலக்காடு, திருச்சூர் மற்றும் வயநாடு மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் கன மழை பேய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளா அரசு தொடர்ந்து மூன்றாவது ஆண்டு வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளதால், கடுமையான அல்லது மிக அதிக மழை பெய்யும் என்ற கணிப்புகளுக்கு மத்தியில் கேரளாவின் பல பகுதிகளிலும் இடைவிடாத மழை மற்றும் பலத்த காற்று வீசியதுள்ளது.
2020 ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாநிலத்தின் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் ‘மிக அதிக’ மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி) சிவப்பு எச்சரிக்கை விடுத்தது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு இடுக்கி, பாலக்காடு, திருச்சூர் மற்றும் வயநாடு மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு கேரளாவின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்தது