திருவனந்தபுரம், ஏப்.13- ஊரடங்கை மீறியதாக பிடிபட்ட வாகனங்களை திருப்பி ஒப்படைக்குமாறு கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா அனைத்து மாவட்ட காவல்துறை தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.தேவையானபோது வாகனங்களை ஆஜர்படுத்துவதாக எழுதி வாங்கியபிறகே வாகனங்கள் சம்மந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. முதலில் பிடித்த வாகனங்கள் முதலில் என்கிற அடிப்படையில் அவை திருப்பி வழங்கப்படும்.வாகனங்களின் உரிமையாளர்களிடமிருந்து அபராதம் வசூலிப்பது தொடர்பாக தலைமை வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும் எனவும் டிஜிபி தெரிவித்தார். சமூதாய இடைவெளி உள்ளிட்ட கொரோனா எச்சரிக்கைகளை பின்பற்றி வாகன ஒப்படைப்பு செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.