tamilnadu

img

பிஎஸ்என்எல் ஊழியர்கள் தேசத் துரோகிகளாம்... பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே வாய்க்கொழுப்பு

பெங்களூரு:
பிஎஸ்என்எல் ஊழியர்கள் தேசத்துரோகிகள், அந்நிறுவனத் தின் சேவை நாட்டுக்கே களங்கம்என்று பாஜக எம்.பி. அனந்தகுமார்ஹெக்டே வாய்த்திமிராக பேசியுள்ளார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்தஅனந்த குமார் ஹெக்டே, அண்மையில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். அப்போதுதான் இவ்வாறு கூறியுள்ளார். 

“பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தேவையானகட்டமைப்புகள் உள்ளன. ஆனால் அங்குள்ளவர்கள் தான் பணி செய்வதில்லை. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் பிரதமர் பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளார். ஆனாலும் அவர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. மத்திய அரசால் தீர்க்க முடியாத அளவுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் களங்கம் உள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தேசத்துரோகிகள்” என்று பேசியுள்ளார்.“பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 85 ஆயிரம் ஊழியர்களை மத்திய அரசு விரைவில் பணிநீக்கம் செய்யஉள்ளது. வரும் நாட்களில் மேலும் பலர் விடுவிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்திருக்கும் ஹெக்டே, “பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை சீர்படுத்த வேண்டும் என்றால்,தனியார் மயம் ஆக்குவது ஒன்றே அதற்குத் தீர்வு”என்றும் தனது முதலாளிகளுக்கு விசுவாசம் காட்டியுள்ளார்.

;