மும்பை, நவ. 25- மகாராஷ்டிரா ஆளுநரை திங்களன்று சந்திக்கச் சென்ற, 3 கட்சிகள் கூட்டணியின் பிரதிநிதிகள், ஆளுநர் அலுவலகத்தில், தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்களை வழங்கி னர். இந்நிலையில், மும்பையில் செய்தி யாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக், தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் 54 பேரில், 53 பேர் தங்களுடனேயே இருப்ப தாகவும், அஜித் பவார் மட்டுமே எதிர் முகாமுக்கு சென்றுவிட்டதாகவும் கூறி யிருக்கிறார். இதன்மூலம், ‘மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணிக்கு, 165 எம்எல்ஏக் களின் ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எனவே, தங்கள் கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதனிடையே, கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தியால், பாஜக முகாமுக்கு தாவிய அஜித் பவாருக்கு, சுழற்சி முறையில், முதலமைச்சர் பதவியை வழங்க சிவசேனா ஒப்புக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், மகாராஷ்டிராவின் அரசியல் சூழல் எந்நேரத்திலும் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 162 எம்எல்ஏக்களின் பலம் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், திங்கள் இரவு அணிவகுப்பும் நடத்தியுள்ளது.