tamilnadu

இளம் விஞ்ஞானி’ பயிற்சி ரத்து: இஸ்ரோ

புதுதில்லி, ஆக.28- பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி  திட்டப் பயிற்சி முகாம் ரத்து செய்யப்படுவதாக  இஸ்ரோ அறிவித் துள்ளது. ​ எட்டு, ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களிடம் விண் வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவ தற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)  ‘யுவிகா’ ((YUVIKA Yuva Vigyani Karyakram) என்றஇளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்தாண்டு அறிமுகம் செய்தது. இந்தியாவின் விண்வெளித் திட்டங்களைப் பற்றிய அறிவை வழங்குவதே இதன் நோக்கம். இதன்மூலம் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் (ஐ.எஸ்.எஸ்.இ., சி.பி.எஸ்.இ மற்றும் மாநில வாரிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்) ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் மூன்று பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி நடப்பு ஆண்டு ‘யுவிகா’ பயிற்சி  திருவனந்தபுரத்தில் விக்ரம் சாரபாய் விண்வெளி மையம், பெங்களூரில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம், அஹமதாபாத்தில் உள்ள  விண்வெளி பயன்பாட்டு மையம் மற்றும் ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம்  ஆகியவற்றில் மே 11-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ​​ இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க 1.53 லட்சம் பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில்இருந்து தகுதி யான 113 மாணவர்களை ‘யுவிகா’ பயிற்சிக்கு தேர்வு செய்யும் பணியில் இஸ்ரோ குழு ஈடுபட்டிருந்தது. இதற் கிடையே கொரோனா தொற்றால் பயிற்சி தள்ளிவைக்கப் பட்டது. இந்த நிலையில் தொற்றின் தீவிரம் தணியாததால் ‘யுவிகா’சார்ந்த பணிகளை திட்டமிட்டபடிமேற் கொள்வதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி ரத்து  செய்யப்படுவதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறி வித்துள்ளது. மேலும், கூடுதல் விவரங்களை www.isro.gov.in என்ற இணையதளத்தில் இருந்து அறிந்து கொள்ள லாம்.