tamilnadu

img

7 நிறுவனங்களிடம் எடியூரப்பா பேரன் வாங்கிய ரூ. 5 கோடி லஞ்சம்... அடுத்தடுத்து வெளியாகும் கர்நாடக பாஜக ஆட்சியின் லஞ்ச - ஊழல் முறைகேடுகள்

பெங்களூரு:
கர்நாடக ஆட்சியதிகாரத்தைப் பயன் படுத்தி, அம்மாநில பாஜக முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்துவரும் ஊழல் முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரத் துவங்கியுள்ளன.

பெங்களூருவில் ரூ. 660 கோடி அரசு வீட்டுவசதி திட்ட காண்ட்ராக்டிற்காக, தனியார் நிறுவனமான ஆர்.சி.சி.எல் நிறுவனத்திடம், முதல்வர் எடியூரப்பாவின் குடும்பத்தினர் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருப் பதை, கன்னட தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ‘பவர் டிவி’, ஸ்டிங் ஆபரேசன்மூலம் கண்டுபிடித்தது. அதாவது, எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா (45) மற்றும் ஒரு மாநில அரசுஅதிகாரி ஆர்.சி.சி.எல் நிறுவனத்திடமிருந்து ரூ.17 கோடி லஞ்சம் கேட்டதற்கான உரையாடல்களை ஆதாரப்பூர்வமாக ‘பவர் டிவி’வெளியிட்டது.இதனால் ஆத்திரமடைந்த எடியூரப்பா அரசு, காவல்துறை மூலம் செப்டம்பர் 28-ஆம் தேதி ‘பவர் டிவி’ நிறுவனத்தில் ரெய்டு நடத்தியது. அங்கிருந்து லஞ்ச குற்றச்சாட்டு தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் அள்ளிச் சென்றது. அந்த டிவி சேனலின் ஒளிபரப்பே, 10 நாட்களுக்கும் மேலாக, பாஜக அரசால்நிறுத்தப்பட்டது.

இந்நிலையில்தான், கர்நாடகத்தில் ஜூலை 2019-இல் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் எடியூரப்பாவின் பேரன் சசிதர்மார்டி இயக்குநராக உள்ள 2 நிறுவனங்களுக்கு, கொல்கத்தாவைச் சேர்ந்த 7 ஷெல்நிறுவனங்களிடமிருந்து ரூ. 5 கோடி சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளஉண்மையை ‘சண்டே எக்ஸ்பிரஸ்’ என்றஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.சசிதர் மார்டி, எடியூரப்பாவின் மகள் வி.ஒய். பத்மாவதியின் மகன் ஆவார். 30 வயதாகும் இவர், பெல்கிரேவியா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மார்டிவிஎஸ்எஸ் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட்ஆகிய 2 நிறுவனங்களுக்கு இயக்குநராக இருக்கிறார்.இந்த 2 நிறுவனங்களுக்குத்தான் கொல்கத்தாவைச் சேர்ந்த 7 நிறுவனங்களிடமிருந்து ரூ. 5 கோடி வரை சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.கொல்கத்தாவைச் சேர்ந்த ரெமாக் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சாகம்பரி மெர்ச்சண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் ஸ்ட்ரேட்டஜிக் வின்காம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்ஆகியவற்றிலிருந்து நெப்ட் (NEFT) மற்றும்ஆர்டிஜிஎஸ் (RTGS) முறையில் 2020 மார்ச் 13முதல் 2020 மார்ச் 20 வரை பெல்கிரேவியாவுக்கு ரூ. 1 கோடியே 50 லட்சம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.பின்னர் இந்த ரூ. 1 கோடியே 50 லட்சம்பணம் உடனடியாக பெல்கிரேவியாவிலிருந்து வி.எஸ்.எஸ் எஸ்டேட்ஸ் ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.இரண்டாவது தவணையாக, 2020 மே 14 மற்றும் 2020 ஜூன் 26-க்கு இடையே சாகம்பரி மெர்சண்ட்ஸ் மற்றும் ஜகதாம்பா கம்மோசல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கன்னாயக் கம்மாடிட்டிஸ், நவ்தெக் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் ராகரனா சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களிலிருந்து ரூ.3 கோடியே40 லட்சம் பணம் மீண்டும் பெல்கிரேவியாவின் ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.

பின்னர், இந்தப் பணமும் வழக்கம் போல, பெல்கிரேவியாவிலிருந்து வி.எஸ்.எஸ் எஸ்டேட்களுக்கு 2020 ஜூலை 6 அன்றுமாற்றப்பட்டுள்ளது. இதனை சண்டே எக்ஸ்பிரஸ் ஆதாரப்பூர்வமாக வெளிக் கொண்டு வந்துள்ளது.கர்நாடக பாஜக ஆட்சியில், முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, பேரன்சசிதர் மார்டி ஆகியோர் மீதான அடுத்தடுத்தஇந்த ஊழல் புகார்கள் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளன.எடியூரப்பா குடும்பத்தினர் மீதான ஊழல் புகார்கள் மீது நீதிமன்றம் தலையிட்டுவிசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.லஞ்ச புகாருக்கு ஆளாகியுள்ள பெங்களூரு வளர்ச்சிக் குழும ஆணையர் மற்றும்ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது ஊழல் தடுப்புசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். விஜயேந்திரா மீதான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெறும் வரை எடியூரப்பா தனது முதல்வர்பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எடியூரப்பாவை பிரதமர் மோடி பாஜக-விலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.