tamilnadu

img

உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் தில்லியில் திறப்பு... 

தில்லி 
20 கால்பந்து மைதான அளவுடன் கூடிய 10 ஆயிரம் படுக்கைகளுடன் தில்லி சத்தர்பூர் பகுதியில் மாநில அரசு கொரோனா வைரஸ் சிகிச்சை மையம் ஒன்றை அமைத்துள்ளது.

1,700 அடி நீளம் 700 அடி அகலம் கொண்ட இந்த சிகிச்சை மையத்தை மத்திய உள்துறை அமைச்சத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையம் தற்போது உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையமாக கருதப்படும் நிலையில், தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இன்று திறந்து வைத்தார்.

சர்தார் படேல் என்ற பெயருடன் அமைக்கப்பட்ட இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் மிதமான மற்றும் அறிகுறிகள் அற்ற கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுவார்கள். 200 அறைகளாகப் பிரிக்கப்பட்டு அறைக்கு 50 படுக்கைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், முதலில் 1000 நோயாளிகள் இன்று அனுமதிக்கப்படுகின்றனர்.

;