tamilnadu

img

உலகப் புகழ்பெற்ற மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு- 2 - என்.ராமகிருஷ்ணன்

பின்வருபவர்கள் தங்களை கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொண்டவர்கள்: 12. பிலிப் ஸ்பிராட் - இங்கிலாந்திலிருந்து வந்த இளம் கம்யூனிஸ்ட் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுடன் வேலை செய்து கொண்டிருந்தார். 13. முசாபர் அகமது - தொழிற்சங்க காங்கிரசின் துணைத்தலைவர், வங்காள விவசாயி- தொழிலாளிகள் கட்சியின் பொதுச் செயலாளர். 14. எஸ்.ஏ.டாங்கே - தொழிற்சங்க காங்கிரசின் உதவிச் செயலாளர். கம்யூனிஸ்ட்டுக் கட்சி தலைமையின் கீழ்உள்ள பம்பாய் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்.

15. எஸ்.வி.காட்டே - 1927ல் தொழிற்சங்க காங்கிரசின் உதவிச் செயலாளர், பம்பாய் முனிசிபல் தொழிலாளர் சங்கத்தின் உதவித்தலைவர். 16. கே.என்.ஜோக்லேகர் - G.J.P. ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் அமைப்புச் செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் குழுவின் உறுப்பினர். 17.சௌகத் உஸ்மானி- பம்பாயிலிருந்து வெளிவந்த தொழிலாளி வர்க்க உருது ஏட்டின் ஆசிரியர். 18. பென் பிராட்லி - இங்கிலாந்தின் ஒருங்கிணைந்த இஞ்சினியரிங் சங்கத்தின் லண்டன் மாவட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர். G.J.P.ரயில்வே தொழிலாளர் சங்கம், பம்பாய் பஞ்சாலை சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர். 19. S.S. மிராஜ்கர் - ஐக்கிய மாகாண தொழிலாளிகள்  மற்றும் விவசாயிகள் கட்சியின் செயலாளர் 20. பி.சி.ஜோஷி- ஐக்கிய மாகாண தொழிலாளி - விவசாயிகள் கட்சியின் செயலாளர்

21. கோபால் பாசக் - 1928ஆம் ஆண்டில் சோசலிஸ்ட் வாலிபர் மாநாட்டின் தலைவர் 22. டாக்டர் ஜி.அதிகாரி - ஜெர்மனியில் இருந்தபோது கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு உறுப்பினர். 1928ல் பம்பாயில் இருந்த கம்யூனிஸ்ட் குழுவில் இணைந்தார். ‘ஸ்பார்க்’ என்ற சோசலிச ஏட்டிற்கு கட்டுரைகள் எழுதினார். 23. எம்.ஏ.மஜித் - கிலாபத் இயக்கத்தின் போது 1920 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு சென்றார். திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார். பஞ்சாபின் கீர்த்தி - கிசான் கட்சியின் செயலாளர், பஞ்சாபில் ‘நவ்ஜவான் பாரத் சபையை’ உருவாக்கியவர்களில் ஒருவர். 24. ஆர்.எஸ்.நிம்ப்கர் - பம்பாய் தொழிற்சங்க கவுன்சிலின் செயலாளர், பம்பாய் மாகாண காங்கிரஸ் குழுவின் செயலாளர், அகில இந்திய தொழிலாளிகள் - விவசாயிகள் கட்சியின் செயலாளர், பம்பாய் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் உதவித் தலைவர்.

25. ராதாராமன் மித்ரா - வங்காள சணல் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர். 26. தரணி கே.கோஸ்வாமி - வங்காள தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் கட்சியின் துணைச் செயலாளர் ஒரு பிரபலமான தொழிற்சங்க தலைவர். 27. சம்சுல் ஹுதா- வங்காள போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் செயலாளர். 28. கோபேந்திர சக்கரவர்த்தி - கிழக்கிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி. கரக்பூர் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தில் ஒன்றேகால் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். 29. சோகன் சிங் ஜோஷ் - அகில இந்திய தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் மாநாட்டின் தலைவர். 30. அயோத்யா பிரசாத் - வங்கத் தொழிலாளிகள் விவசாயிகள் கட்சியின் செயலுக்கமுள்ள ஊழியர்.

31. எச்.எல். ஹட்சின்சன் - ‘புதிய ஸ்பார்க்’ என்ற ஏட்டின் ஆசிரியர். 32ஆவது குற்றவாளி லெஸ்சர் ஹட்சின்சன், ஒரு ஆங்கிலேய பத்திரிகையாளர், ‘புதிய ஸ்பார்க்’ ஆசிரியரான ஹட்சின்சன் கைதானபின் அந்த ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். அதனால் அவர் கைது ஆனார்.  கம்யூனிஸ்ட்டுகளை கைது செய்தால் தொழிலாளர்கள் பெரும் கிளர்ச்சி செய்வார்கள் என்று பயந்த ஆங்கிலேய அரசாங்கம் பம்பாயில் ராணுவத்தை தயார் நிலையில் வைத்தது என்ற போதிலும் பம்பாயிலும், கல்கத்தாவிலும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கிலேய அரசாங்கம் இளம் கம்யூனிஸ்ட் தலைவர் அமீர் ஹைதர்கானையும் இந்த வழக்கில் சேர்த்தது. ஆனால் அவர் தலைமறைவாக இருந்ததால் கைது செய்யப்பட முடியவில்லை. இந்த வழக்கை நடத்துவதற்கு அரசாங்க வழக்கறிஞராக லாங்போர்டு ஜேம்ஸ் என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆங்கிலேய அரசு அந்நாட்களில் கொடுத்த மாதச் சம்பளம் 34 ஆயிரம் ரூபாய்.

- தொடரும்