கோழிக்கோடு:
பாஜக ஆட்சியில் பெண்களும் குழந்தைகளும் நெருக்கடியில் உள்ளதாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார். மத்திய அரசின் மக்கள் விரோத தாராளமய கொள்கைகளின் முக்கிய இரைகளாக முன்னெப்போதும் இல்லா வகையில் பாதுகாப்பற்ற நிலையில் பெண்கள் உள்ளனர். பாலியல் வல்லுறவு உட்பட பெண்களுக்கு எதிரான அநீதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரையாக்கப்படுவதில் மூன்றில் ஒரு பகுதி சிறுமியர் என கூறினார்.
கோழிக்கோடு மாவட்டம் எலத்தூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கேரள மாநில மாநாடு வெள்ளியன்று துவங்கியது. பிரதிநிதிகள் மாநாட்டை துவக்கிவைத்தபிருந்தா காரத் மேலும் பேசியதாவது: அசாமில் குடிமக்களை வெளியேற்றவும் காஷ்மீரை பிரிக்கவும் விரைந்து செயல்படும் அரசு பெண்களை பாதுகாக்க அக்கறைகாட்டவில்லை. அதே நேரத்தில் பெண்களை சிதைத்த வழக்குகளிலும் குற்றவாளிகளை பாதுகாக்க அரசு முனைப்பு காட்டுகிறது. கத்துவாவிலும் சுவாமி சின்மயானந்துக்கு எதிரான பாலியல் வழக்குகளிலும் அதைப் பார்த்தோம். இத்தகைய செயலில் ஈடுபடுவோருக்கு ஆதரவாக குரல் கொடுப்பதுதான் அவர்கள் கொண்டாடும் கலாச்சாரமா? நம்பிக்கையைக்கூட ஆர்எஸ்எஸ்-இன் குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவதை சபரிமலை வழக்கில் பார்க்க முடிந்தது. அனைத்து மத அடிப்படைவாதமும் பெண்களின் முன்னேற்றத்தை இருளில்தள்ளவே முயற்சிக்கின்றன. மறுமலர்ச்சி போராட்டங்களின் மூலம் பெற்ற முன்னேற்றத்தை தடுக்கும் முயற்சிக்கு எதிராக சமரசமற்ற போராட்டம் நடத்தியே தீர வேண்டும்.
பாகுபாடுகளுக்கு எதிராகவும்..
காஷ்மீர் பிரச்சனையில் விவாதிக்கக் கூட முன்வராமல் அரசியல் சாசனத்தின் 370ஆம் பிரிவு திரும்பப் பெறப்பட்டது. கைதுக்கு அஞ்சி மருந்து வாங்குவதற்குகூட பெண்கள்வெளியில் செல்ல முடியாத அவலநிலைஅங்கு உள்ளது. முத்தலாக் பிரச்சனையில் மத்திய அரசுக்கு இரட்டை நிலைப்பாடு. பெண்களை பயன்படுத்தி முஸ்லிம் ஆண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதே குற்றத்தை செய்யும் மற்ற மதங்களில் உள்ளவர்களுக்கு எதிரான நடவடிக்கை இல்லை. முத்தலாக் போன்ற பெண்களுக்கு எதிரானவற்றை எதிர்ப்பதோடு பாகுபாடுகளையும் அம்பலப்படுத்த வேண்டும்.கேரள எல்டிஎப் அரசின் மாற்றுக்கொள்கைகள் நாட்டுக்கே முன்மாதிரியாகும். சமூகத்தின் அடித்தட்டில் உள்ள பெண்களை கரம்பிடித்து மாற்றத்துக்கான பாதையை திறக்க வேண்டும் என பிருந்தா காரத்கூறினார். பினராயி விஜயன் அரசுக்கான மக்களின் நம்பிக்கையே இடைத்தேர்தல் வெற்றி எனவும் அவர் தெரிவித்தார்.முன்னதாக வெள்ளியன்று (அக்.25) காலை தேவகி டீச்சர் நினைவு மண்டபத்தில்அவரது மகள் டி.வி.லலிதபிரபா மாநாட்டுக்கான சுடரை எடுத்து கொடுத்தார். மாநில செயலாளர் பி.சதீதேவி பெற்றுக்கொண்டு மாநாட்டு வளாகத்தில் ஏற்றி வைத்தார். மாநில தலைவர் சூசன் கோடி மாநாட்டுக் கொடியை ஏற்றினார்.