tamilnadu

img

தில்லி: பெண் காவல்உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை 

தில்லியில் பெண் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியில் உள்ள பத்பர்கஞ்ச் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்ட ப்ரீத்தி, ரோகினி கிழக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9:30 மணிக்கு வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ப்ரீத்தி தலையில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தில்லி இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் உதவி காவல் ஆய்வாளர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.