tamilnadu

img

கொரோனாவுக்கு பெண் பலி.... குஜராத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

அகமதாபாத் 
இந்தியாவின் மேற்கு பகுதி மாநிலமான குஜராத்தில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இந்த மாநிலத்தில் ஏற்கெனவே 5 பேர் பலியாகிருந்த நிலையில், ஞாயிறன்று 45 வயதுமிக்க பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இதன் மூலம் குஜராத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.  

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் 
கொரோனா வைரஸால் பலியான அந்த பெண் பவநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரு வாரங்களுக்கு முன்பு பக்கவாத நோய்க்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த பெண் கொரோனாவால் இறந்தாரா? இல்லை பக்கவாதத்தால் இறந்தாரா? பற்றி விரிவான விளக்கம் தெரிவிக்கவில்லை. ஆனால் கொரோனாவால் தான் உயிரிழந்தார் என மாநில நிர்வாகம் அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.  

;