தடுக்கப்படாது அனுமதித்திடும். இதன்காரணமாக இந்திய அரசியலில் வெளிநாட்டுக் கம்பெனிகள் செல்வாக்கினைச் செலுத்துவதற்கு இட்டுச்செல்ல முடியும்,” என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
இந்தப்பிரச்சனை இப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நம்முன் உள்ள கேள்வி என்னவெனில், தேர்தல் ஆணையம், பீகாரில் நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்துவதற்கும், அனைத்துஅரசியல் கட்சிகளையும் சமமானஅளவில் நடத்துவதை உத்தரவாதப்படுத்துவதற்கும் அரசமைப்புச் சட்டத்தின் 324ஆவது பிரிவின்படி எப்படிக் கடமையாற்றப் போகிறது என்பதேயாகும். தேர்தல் ஆணையம் செப்டம்பர் 25 அன்று அளித்துள்ள அறிவுரைகள் இந்த முக்கியமான பிரச்சனை குறித்து எதையும் சுட்டிக்காட்ட வில்லை.
வெகுஜன ஊடகங்களும், சமூக ஊடகங்களும்
அடுத்த பிரச்சனை, வெகுஜன ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் முறைப்படுத்தும் பிரச்சனையாகும். சமீபத்தில் நமக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள், பாஜக, தன்னிடம் உள்ள அபரிமிதமான பண பலத்தைக் கொண்டு, இதர அரசியல் கட்சிகளைவிட மிகவும்தாராளமாக பணத்தைச் செலவு செய்யக்கூடிய வல்லமையைப் பெற்றிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. 2019 பொதுத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில், அப்போது பாஜக தலைவராக இருந்த, அமித் ஷா, கூறியதைச் சற்றே நினைவுகூர்வோம். “எங்கள் கட்சியின் சார்பில் 32 லட்சம்வாட்சப் குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மூலம் எந்த செய்தியையும், அது உண்மையானதாக இருந்தாலும் சரி, அல்லது பொய்யானதாக இருந்தாலும் சரி, ஒருசில மணித்துளிகளில் ‘வைரலாக’ ஆக்கிட முடியும்.”
மேலும், சர்வதேச அளவில் உண்மையை அறியும் இணைய தளங்கள் கண்டிருக்கும் விஷயம் என்னவென்றால், பொய் செய்திகளை உருவாக்கிப் பதிவேற்றுவது என்பது இந்தியாவில்தான் அதிகம் என்று கூறியிருக்கின்றன.இப்போது பீகார் தேர்தலையொட்டி, பாஜக அமித் ஷாவின் தேர்தல் பிரச்சாரத்தைக் கொண்டு செல்வதற்காக 72ஆயிரம் எல்இடி டிவி-க்களை வைத்திருக்கின்றன. இணைய தளத்தின்மூலமாக 60 பேரணிகளை நடத்தியபின், பாஜக, தங்களுடைய தேர்தல் பிரச்சாரப் பணியில் 9500 தகவல் தொழில்நுட்ப செல்கள் வேலை செய்துகொண்டிருப்பதாகவும், அவற்றின்மூலம் 72 ஆயிரம் வாட்சப்குழுக்களையும் ஒருங்கிணைத்திடு வோம் என்றும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு குழு என்ற முறையில் கடந்த இரு மாதங்களில் 50 ஆயிரம் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இதற்கான செலவினம் குறித்து கணக்குப்போட்டுப் பார்க்கும்போது மனம் தடுமாறுகிறது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நிதியளிப்பவர்கள் பெயர்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சட்டத்திருத்தம் கொண்டுவருவதற்கு முன்பே,கார்ப்பரேட்டுகளிடமிருந்து பாஜக பெற்றுள்ள நிதி தொடர்பாக, பொது வெளியில் வெளியாகியிருக்கும் விவரங்களை ஆராய்வோமானால், நிச்சயமாக பாஜகவிற்கும் இதர கட்சிகளுக்கும் இடையே இடைவெளி மிகப்பெரிய அளவில் இருப்பதைக் காண முடியும். இத்துடன் எவ்விதமான வரம்பும் இன்றி கார்ப்பரேட்டுகள் பாஜகவிற்கு அளித்திடும் நிதியையும் சேர்த்தோமானால், நிச்சயமாக இது நாட்டில் தேர்தல் ஜனநாயகத்திற்கு சாவு மணி அடித்தது போன்றதேயாகும்.சமூக ஊடகங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொள்வது சமீபகாலங்களில் புதிய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றன. இதன்மூலம் பாஜக பெண்களுக்கு எதிராகவும், மற்றவர்களுக்கு எதிராகவும் வெறுப்பைக்கக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டி ருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக் கிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளிக்கொணர்ந்துள்ள ஓர் அறிக்கையானது, எப்படியெல்லாம் பாஜக-வும் முகநூல் நிறுவனமும், டிவிட்டர் வலைத்தளமும் பாஜக-வின் மக்களைப் பிளவுபடுத்தும் பிரிவினைப் பிரச்சாரத்திற்கு உடந்தையாக இருந்து வந்தன என்பதைவெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது. இதற்காக பாஜக, அந்நிறுவனங் களுக்கு அபரிமிதமான அளவிற்கு விளம்பரங்களைத் தந்து உதவி இருக்கிறது. பாஜக-வின் வாட்சப் செய்திகள்பயன்படுத்தப்படுவதுடன் இதுவும் சேர்ந்து இவர்களின் பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்குவதற்கு அடிப்படையாக இருந்துள்ளன.
மின்னணு வாக்கு எந்திரங்கள்
இறுதியாக, மூன்றாவது பிரச்சனை மின்னணு வாக்கு எந்திரங்கள் செயல்படும் விதம் தொடர்பானதாகும். மின்னணு வாக்கு எந்திரங்களுடன், தற்போது வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனையும் (VVPAT) செயல்படுத்தப்பட்டிருப்பதில் பல இடங்களில் தில்லுமுல்லுகள் நடந்திருப்பதை ஊடகங்கள் வெளிச்சத் திற்குக் கொண்டு வந்திருக்கின்றன. மேலும் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை (VVPAT) கருவியை உபயோகப்படுத்துவதற்கு தனியார் ஒப்பந்தக்காரர்களை தேர்தல் ஆணையம் அமர்த்தியிருக்கிறது. இதுஒட்டுமொத்த தேர்தல் நடைமுறை யையும் சமரசத்திற்கு உள்ளாக்கி, தில்லுமுல்லுகள் நடப்பதற்கும் இட்டுச்சென்றிருக்கிறது. எனவே, தேர்தல்ஆணையம் இதனை மாற்றியமைத்திட வேண்டும். வாக்காளர்கள் தாங்கள் அளிக்கும் வாக்குதான் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனைக் கருவிக்குச் செல்ல வேண்டுமே தவிர, வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனைக் கருவியில் பதிந்திடும் வாக்கு, மின்னணு வாக்கு
எந்திரத்திற்கு வரக்கூடாது. அப்போதுதான் வாக்காளர் தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். அதாவது தேர்தல் அதிகாரியிடமிருந்து மின்னணு எந்திரம், பின்னர் வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனைக் கருவி என்ற அடிப்படையில் வாக்களிப்பது பதிவு செய்யப்பட வேண்டும். இது கட்டாயமாகும். இந்த நடைமுறையில் உள்ள ஓட்டைகள் அனைத்தும் அடைக்கப்பட வேண்டும்.
இம்மூன்று பிரச்சனைகளையும் தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்டளைகளை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்தேர்தல் ஆணையம் அளித்திடவேண்டும் என்று கேட்டுக்கொள் கிறோம்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கடிதத்தில் கோரியுள்ளார். (ந.நி.)