தரமான இலவச அரிசி வழங்குக!
மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
கொரோனாவால் வேலையிழந்துள்ள ஏழை-எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்; தரமான அரிசி வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மத்திய அரசின் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா சிறப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் கூடுத லாக ஐந்து கிலோ அரிசி ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு இல வசமாக வழங்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் தமிழக அரசின் சார்பில் நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ மட்டுமே அரிசி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ஐந்து கிலோ அரிசி வழங்கவில்லை.
மத்திய அரசு ஏப்ரல் மாதம் வழங்கவேண்டிய அரிசியை மே மாதம் 50 சதவீதமும், ஜூன் மாதம் 50 சதவீதமும் வழங்கப்படு மென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தரவு அம லாகவில்லை. உதாரணமாக இரண்டு நபர் உள்ள குடும்ப அட்டைக்கு ஏப்ரல் மாதம் மத்திய, மாநில அரசுகள் 20 கிலோ அரிசி வழங்க வேண்டும். மொத்தத்திற்கே 10 கிலோ மட்டுமே வழங்கப்பட் டுள்ளது. மீதமுள்ள 10 கிலோவை, மே மாதம் வழங்க வேண்டிய 20 கிலோவுடன் ஏப்ரல் மாத பாக்கியில் ஐந்து கிலோ சேர்த்து 25 கிலோ வழங்க வேண்டும். அதே போல் ஜூன் மாதம் 25 கிலோ வழங்க வேண்டும்.
இப்படி எத்தனை நபர் கொண்ட குடும்ப அட்டையோ அந்த எண்ணிக்கையின்படி நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ வீதம் உணவு பாதுகாப்பு சட்டம் 2013 ன் படியும், மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தின்படி கூடுதலாக 5 கிலோவும் சேர்த்து கணக்கிட்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு முன்னுரிமை, முன்னு ரிமையற்ற ஆகிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும். அதே போல் அந்தியோதயா அன்னயோஜனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் 35 கிலோ அரிசியுடன் பிரதான் மந்திரிகரீப் கல்யாண் அன்ன யோஜனா சிறப்புத் திட்டத்தின் கீழ் கூடுதலாக நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி வழங்க வேண்டும். ஒரு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு 12 கிலோ அரிசி வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவின்படி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க வேண்டிய அரிசியின் அளவு ஏற்கனவே விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெளிவாக அரசாணையும்,பதிவாளரின் செயல்முறைக்கான வழிகாட்டல் கடிதத்திலும் கூறப்பட்டி ருந்தும், தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் இருக்கக்கூடிய மதுரை மாநகரில் அறிவித்தபடி அரிசி வழங்கப்படாத நிலை உள்ளது. மேலும் வழங்கப்படும் அரிசியும் தரமற்றதாக, சாப்பாட்டிற்கு லாயக்கற்றதாக, புழுத்துப் போனதாக, குப்பை கூளங்களாக வும் உள்ளது. கடந்த சில தினங்களுக்குமுன் கூட சென்னை யில் ஒரு பகுதியில் எலி ஒன்று இறந்த நிலையில் அரிசி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயிலிருந்து பாதுகாக்க பல அறிவுரை களை கூறும் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கும் அரிசி யின் மூலம் நோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதே போல் கோதுமை வழங்கப்படாத புகார்களும் வரு கிறது. ஏற்கனவே வேலைக்கு செல்ல முடியாமல், பணம் இல்லாத சூழலில் இலவச பொருட்களோடு 100 ரூபாய்க்கு வேறு பொருட்கள் வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தி விற்பதாகவும் புகார்கள் வருகிறது.
தமிழக அரசு, மதுரை மாவட்ட ஆட்சித் தலைர், பொதுவினி யோகத் திட்டவழங்கல் துறை, கூட்டுறவுத்துறை இந்த பிரச்சனை யில் தலையீடு செய்து தமிழக அரசு, மத்திய அரசு அறிவித்துள்ள படி நபர் ஒன்றுக்கு மாதம் 10 கிலோ வீதம், குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கைக்கேற்ற அளவில் அரிசி வழங்கப்படு வதை உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானி டைசர் வழங்கவேண்டும். மற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப் படுவதுபோல் மருத்துவக் காப்பீடு, நிவாரணத் தொகை வழங்க வேண்டும். சிறப்பு ஊக்கத் தொகை, பயணப்படி, மாதாந்திர சம்பளம் கிடைப்பதை உறுதிப்படுத்தி அவர்கள் நம்பிக்கை, ஊக்கத்துடன் பணியாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.