tamilnadu

img

வேலைவாய்ப்பு எங்கே? பதிலளியுங்கள் அமைச்சரே!

புதுதில்லி:
2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சனிக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இளைஞர்கள் சார்பில், இது தொடர்பாக நான் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்திய இளைஞர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அமைச்சருக்கு இருக்கிறது. அவர் இதுகுறித்து எந்தவித கவலையும் கொள்ளவில்லை. இந்திய இளைஞர்களுக்கு வேலை தேவை, ஆனால் அதை வழங்குவதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.மேலும், தனது கருத்துக்களுக்கு இடையே “JawaabDoMantriJi” (பதிலளியுங்கள் அமைச்சரே) என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்.

;