tamilnadu

img

எப்போது பள்ளிகளை திறக்கலாம்? பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள்

புதுதில்லி:
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து பெற்றோர்கள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகநாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப் பட்டுள்ளன.  இந்த நிலையில், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்று பெற்றோர்கள்  கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கருத்துக் களை வரும் 20ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் மின்னஞ்சல் மூலமாகவும் ஆலோசனை சொல்ல மனித வள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

;