tamilnadu

img

மீண்டும் ரிசர்வ் வங்கி நிதியில் கைவைக்கும் மோடி அரசு?

எச்சரிக்கும் பொருளாதார வல்லுநர்கள்

புதுதில்லி, ஜூலை 10- இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வரும் நேரத்தில், மோடி அரசு மீண்டும் ரிசர்வ் வங்கியின் நிதியில் கைவைக்க வாய்ப்பிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் எச்ச ரிக்கை தெரிவித்துள்ளனர். ‘எக்னாமிக் டைம்ஸ்’ ஏடு இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளி யிட்டுள்ளது. இந்தியா நடப்பாண்டில் அதன் மொத்த நாட்டு உள்நாட்டு உற்பத்தி யில் 7 சதவிகிதம் அளவுக்கு அதிக மான பட்ஜெட் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று ‘புளூம்பெர்க்’ போன்ற நிறுவனங்கள் கூறுகின்றன. நிதிப்பற்றாக்குறையை 3.5 சதவிகிதத்திற்குள் நிறுத்த வேண் டும் என்பது மத்திய அரசின் இலக்கை விட இது இரண்டு மடங்கு அதிகம் என்பதுடன், 1994-ஆம் ஆண்டில் தான் இதுபோன்றதொரு மோச மான நிலை ஏற்பட்டது என்றும் குறிப் பிட்டுள்ளன. எனவே, தற்போதைய நிலை யைச் சமாளிக்க பல்வேறு யோச னைகள் வைக்கப்படுகின்றன. அதில், இறையாண்மை பத்திரங் களை வாங்கச் செய்வது அல்லது ரிசர்வ் வங்கியிடம் ஈவுத்தொகை யை அதிகரித்து கேட்பதும் ஒன்றா கும். 

இந்தியாவின் நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம், ரிசர்வ் வங்கியை முதன்மை சந்தையில் நேரடியாக அரசாங்கத்தி டம் இருந்து பத்திரங்களை வாங்கு வதை தடுக்கிறது. ஆனாலும் நாடு ஒரு தேசிய பேரிடர் அல்லது கடுமை யான மந்த நிலையை எதிர்கொண் டால் தப்பிக்கும் விதிமுறையை சட் டம் வழங்குகிறது. ரிசர்வ் வங்கி இதுவரை இரண் டாம் நிலை சந்தையில் சில விவேக மான பத்திர கொள்முதலை செய்துள்ளது.  எனினும், பொருளாதார முடக் கத்தை எதிர்கொள்ளவும், பட்ஜெட் பற்றாக்குறையை சரிக்கட்டவும் மீண்டும் ரிசர்வ் வங்கியின் கதவை யே மோடி அரசு தட்டும் என்று பொரு ளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  ஏற்கெனவே, சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ரிசர்வ் வங்கியின் கையிருப்பை மோடி அரசு சூறையாடி விட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.