tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போர்க்கோலம்...

திருச்சிராப்பள்ளி: திருச்சி மாநகராட்சி சார்பில் மியாவாகி முறையில் அடர்காடு உருவாக்கும் திட்டத்தை ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.    இத்திட்டத்திற்காக ஸ்ரீரங்கம் தெற்கு தேவி தெருவில் உள்ள  ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான பன்னீர் தோப்பில் 5027 சதுர மீட்டர் பரப்பளவில் 10,000 மரங்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தலைமை தாங்கி மரச்செடிகளை நட்டு இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 5027 சதுர மீட்டர் பரப்பளவில் போர்வெல் நீர்பாசனத்துடன் 53 வகையான நாட்டு மரங்கள், 10 மடங்கு வேகமாக வளர கூடிய மரங்கள், 30 மடங்கு அடர்த்தியாக வளரும் மரங்கள், ஒரு சதுர மீட்டருக்கு 3 மரச் செடிகள் நடப்படுகிறது. இவை 2 ஆண்டுகள் கழித்து, மழை பொழிய மிக பெரிய வாய்ப்பை உருவாக்கி தரும்.  காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்தும். பறவைகள், பூச்சிகள், தேனீகள் அதிகளவு வாழும். இதனால் உயிர் சூழல் மேம்படும். மேலும் இத்திட்டத்தை மாநகராட்சி பகுதி முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றார். நிகழ்ச்சியில் நகரப் பொறியாளர் அமுதவள்ளி, செயற்பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர்கள் வைத்தியநாதன், சண்முகம், இளநிலை பொறியாளர் பாலமுருகன், ஸ்ரீரங்கம் கோவில் உதவி ஆணையர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.