உத்தரபிரதேசத்தில் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் பாண்டா வில் உள்ள பிந்தரன் என்ற கிராமத்தில் ராம் நரைன் என்ற விவசாயி செவ்வாயன்று விஷம் அருந்தினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் புதனன்று உயிரிழந்தார்.
இதுகுறித்து ராம் நரைனின் சகோதரர் வித்யாசாகர் காவல்துறையிடம் கூறியதாவது:-
4 ஆண்டுகளுக்கு முன் ராம்நரைன் ரூ 2.5 லட்சம் வங்கியிலிருந்து கடன் வாங்கினார். அவரால் கடனை திரும்பி செலுத்த இயலவில்லை. இதனால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளான ராம் நரைன் தற்கொலை செய்து கொண்டார்.