tamilnadu

img

மசோதாக்களை ஆராயாமல் அவசரமாக நிறைவேற்றம்

புதுதில்லி,ஜூலை 26-  மத்திய பாஜக அரசு மசோதாக் களை தேர்வு கமிட்டி மற்றும் நிலைக் குழுவிற்கு அனுப்பி ஆராயாமல் அவசர அவசரமாக நிறைவேற்றி வருகிறது என்று 17 எம்.பி.க்கள் , மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் புகார் அளித்துள்ளனர். மத்திய பாஜக அரசு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியில் இருப்ப தால் எதிர்க்கட்சிகளின் கருத்துக் களுக்கு வாய்ப்பளிக்காமலும் மதிக்கா மலும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கிடப்பில் கிடக்கும் மசோதாக்கள், திருத்தம் செய்யப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றை தாக்கல் செய்து அவசர அவசரமாக நிறைவேற்றுகிறது. கடந்த ஒரு வாரத்திற்குள் என்ஐஏ, முத்தலாக், ஆர்டிஐ திருத்தம் போன்ற முக்கியமான மசோதாக்கள் உள்பட பல மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளனர். முக்கியமான மசோதாக்களை நாடாளுமன்றத்தின் தேர்வு கமிட்டி மற்றும் நிலைக்குழுவு க்கு அனுப்பி ஆராய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முறையிட்டன. ஆனால் பாஜக அரசு அவர்களின்  கோரிக்கைகளை ஏற்கவில்லை. இந்நிலையில் அவசர அவசர மாக மசோதாக்கள் நிறைவேற்றப்படு கின்றன என்று  காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக மாநிலங்களவை  எம்.பி.க்கள்  17 பேர் குடியரசு துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்யா நாயுடுவிடம் புகார் அளித்துள்ளனர்.