லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு பகுஜன் சமாஜ்கட்சித் தலைவரும், முன்னாள்முதல்வருமான மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஹத்ராஸ் தலித் பெண் கொடூர சம்பவத்துக்குப் பிறகாவது யோகி அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்என்று நம்பினோம். ஆனால் பல்ராம்பூரில் இதே போன்று மற்றுமொரு தலித் பெண்ணுக்கு எதிராக குற்றம் நடந்துள்ளது.பாஜக ஆட்சியில் கிரிமினல் கள், மாபியாக்கள், பாலியல் வன் கொடூரக்காரர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். உத்தரப் பிரதேச அரசு விழித்துக் கொள்ளவில்லை எனில், மத்திய அரசுவிழித்துக்கொள்ள வேண்டும்,இல்லையெனில் கொந்தளிப்பேஏற்படும். உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.குறிப்பாக, தலித் பெண்களுக் குப் பாதுகாப்பு என்பதே இல்லை.
அதிலும், பெண்ணின் உடலைகுடும்பத்திடம் ஒப்படைக்காமல் எரியூட்டியது வெட்கக்கேடானது. இது காட்டாட்சி அல்லாமல்வேறொன்றும் இல்லை.கடந்த சில மணி நேரங்களில்பெண்களுக்கு எதிரான வன் கொடுமைச் சம்பவங்கள் பலநடந்துள்ளன. ஆதித்யநாத் துக்கு நான் கூற விரும்புவதெல்லாம் உங்களைப் பெற்றதும் ஒரு பெண்தான். அடுத்தவர்களின் பெண்களையும் உங்கள் பெண்போல் நீங்கள் காக்க வேண்டும்.உங்களால் பாதுகாக்க முடியவில்லை என்றால் தயவு செய்துராஜினாமா செய்து விடுங்கள்.பாஜக கட்சி, ஆர்எஸ்எஸ் கொடுத்த நெருக்கடியில் யோகியை முதல்வராக்கி இருக்கலாம்,ஆனால் அவரிடம் எந்த ஒரு திறமையும் இல்லை. ஆட்சி செய்வதற்கு அவர் தகுதியானவரும் இல்லை. எனவே, அவரை கோரக்பூர் மடத்துக்கு அனுப்பி விடுங்கள், அல்லது ராமர் கோயில்கட்டும் இடத்துக்கு அனுப்பி விடுங்கள். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.