புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண்ஒரு கும்பலால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி நூற்றுக்கணக்கானவர்கள் தில்லி, நாடாளுமன்ற வீதியில் திரண்டனர்.
ஜனநாயகத்தை வெட்கித்தலைகுனிய வைத்துள்ள உத்தரப்பிரதேச பாஜக அரசு இனியும் ஆட்சியில் தொடருவதற்கு உரிமை இல்லை என்று சீத்தாராம் யெச்சூரி சாடியுள்ளார்.மகாத்மா காந்தியின் பிறந்த நாளானஅக்டோபர் 2 அன்று நடைபெற்ற இந்தஆர்ப்பாட்டத்தில் தில்லி மாநில முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் பல் வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து முதல்வர்யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இக்கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து இந்தக் கொடிய செயலில் ஈடுபட்டவர் களைக் காப்பாற்றிட மாநில அரசும் அதன் காவல்துறையும் நடந்துகொள் ளும் விதம் குறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆவேசத்துடன் முழக்கமிட்டுகண்டித்தனர்.
அரவிந்த் கெஜ்ரிவால்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:“
நடந்துள்ள சம்பவங்கள் மிகவும்மனவலியைத் தருகிறது. பாதிப்புக்குஉள்ளான பெண்ணின் குடும்பத்தினரை, மற்றவர்கள் சந்திக்கவிடாமல் அவர்களைப் பூட்டி வைக்கக் கூடாது. பாதிக்கப் பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்திருப்பது, முதல்தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்திருப்பது அனைத்தும் மிகவும் மன வேதனையையும் வலியையும் அளிக்கின்றன. இக்கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டகயவர்களை மாநில அரசு காப்பாற்றும்விதத்திலேயே நடந்துகொண்டிருப்பதான எண்ணத்தை இவை ஏற்படுத்தி இருக்கின்றன.”இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.
மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்?
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச் சூரி பேசியதாவது:
“நடந்துள்ள கொடூரமான சம்பவம் குறித்து எதுவும் கூறாமல் மத்திய பாஜகஅரசு மவுனம் கடைப்பிடிப்பது ஏன்? ஹத்ராஸ் சம்பவத்தில் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் உத்தரப்பிரதேச அரசாங்கம் நடந்து கொள்ளும்விதம், அக்கட்சியின் எதேச்சதிகார கோரமுகத்தைக் காட்டுகிறது.பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்? உள்துறை அமைச்சர் எங்கே? நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் ஏன் இன்னும் 144 தடை உத்தரவின்கீழ் இருக்கிறது? உத்தரப்பிரதேச மாநிலம், பெண்கள் உட்பட மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களையும், ஊடகத்தினரையும் தாக்கி இருப்பதன் மூலம், இவை அனைத்தும் மத்தியஅரசின் ஆசியுடன்தான் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இந்த அரசாங்கத்தால் அடிப் படை ஜனநாயக உரிமைகள் மற்றும் மக்களின் வாழ்க்கை ஆபத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. இவற்றுக்குப் பதில் சொல்லாமல் அவர்கள் தப்ப முடியாது. பாஜக, ஜனநாயகத்தை வெட்கித்தலைகுனிய வைத்திருக்கிறது.யோகி ஆதித்யநாத் தலைமையில் உள்ள உத்தரப்பிரதேச அரசாங்கம் ஆட்சியில் தொடர்ந்து நீடிப்பதற்கு உரிமை எதுவும் இல்லை. எங்கள் கோரிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப் பட வேண்டும் என்பதாகும்.”இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், நடிகர்ஸ்வரா பாஸ்கர், ஜிக்னேஷ் மேவாணி, பீம் சேனை தலைவர் சந்திரா மான்சேகர் ஆசாத், அகில இந்திய மாணவர் சங் கத்தின் தலைவர்கள் ஆகியோரும் உரையாற்றினர். (ந.நி.)