tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

திட்டமிடப்படாத ஊரடங்கு காரண மாக இந்திய ஏழை மக்கள் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளதாக தில்லி ஐ.ஐ.டி. பொருளாதார பேராசிரியர் ஜெயன் ஜோஸ் தாமசின் ஆய்வறிக்கை கூறுகிறது. அப்படியானால் இந்த இழப்பை உருவாக்கி ஏழை மக்க ளின் வாழ்வாதாரத்தை பாழாக்கிய மக்களுக்கு இந்த இழப்பை ஈடு  செய்யும் பொறுப்பு மோடி அரசாங்கத் துக்கு இல்லாமல் எப்படி இருக்க இயலும்?

அமித்ஷா தலைமையிலான உள்துறை அமைச்சகம் கோவிட் காலத்தில் மக்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என அறிவுரைகளை வழங்கி வருகிறது. ஆனால் அமித்ஷா வைரசை எப்படி கட்டுப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக மாநிலங்களில் அரசியல் அதிகாரத்தை சதி மூலமோ அல்லது வஞ்சகத்தின் மூலமோ கைப்பற்ற வேண்டும் என்பதில்தான் அமித்ஷா கவனம் செலுத்துகிறார்.  கோவிட்  கொள்ளை நோய் மரண நடனம் புரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் பேசுவது, தேர்தல் பேரணி என நிகழ்கின்றன.

1995 ஆம் ஆண்டிலிருந்து குஜராத் மாநிலத்தை பா.ஜ.க. ஆண்டு வருகிறது. குஜராத் மாடலை  பல பொய் பிம்பங் களை உருவாக்கிட மோடி பயன்  படுத்தினார்.  கேரளாவை சோமாலியா என வாய் கூசாமல் அழைத்தார். ஆனால் இன்று எந்த மாடல் மக்களை காப்பாற்றி இருக்கிறது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. வெறுப்பு அரசியல் எனும் நஞ்சை கக்கி மக்களிடையே பிளவை உருவாக்கும் எந்த ஒரு  சித்தாந்தமும் பேரிடர் கொள்ளை நோயிலிருந்து இந்திய மக்களை  காக்கவும் முடியாது; சமாதானத்தை யும் நல்ல வாழ்வாதாரத்தையும் கொண்டு வரவும் முடியாது.