tamilnadu

img

போலிச் சான்றிதழ்களை தடுக்க யுஜிசி நடவடிக்கை

புதுதில்லி:
போலிச்சான்றிதழ்களை தடுக்கும் வகையில், பட்டப்படிப்பு சான்றிதழ்களை கியூ.ஆர். கோடு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வழங்க பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழுச் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் மாணவர்களின் தனிப்பட்ட அடையாளத்தை சரிபார்க்கும் வகையிலும், சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை நிரூபிக்கும் வகையிலும், மதிப்பெண் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களில் மாணவர்களின் புகைப்படம், கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தின் முப்பரிமாண லோகோ, கியூ ஆர் கோடு உடன் சான்றிதழ்களை அச்சிட்டுவழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சான்றிதழ்களில் மாணவரின் பெயர், முழு நேரப் படிப்பு அல்லது பகுதி நேரப் படிப்பு, இருப்பிடம் உள்ளிட்ட வற்றையும் இணைத்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

;