tamilnadu

img

இரண்டு கடிதங்கள்: போர்டு ரைட்டர் மாரிதாஸும், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும்

தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சி செய்தி ஊடகங்களில் பணிபுரிந்து வருபவர்கள் மீது
‘நடுநிலைவாதியான’ மாரிதாஸ் கடந்த ஜுலை மாதம் எழுப்பிய அபத்தமான புகார்களின்
இறுதிக்கட்டம், நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஹாசீஃப்
பணிநீக்கம், குணசேகரன், செந்தில்வேல், ஜீவசகாப்தன் போன்றோரின் வெளியேற்றம் என்பதாக
முடிவடைந்திருக்கிறது.
ஜூலை 6 அன்று, ‘News18 Tamil ஊடகத்தில் இருக்கும் மிகப் பெரிய மோசடியைப் பற்றி என் பக்க
Email நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. உரிய நபர்களிடம் சென்று சேர்க்கப்பட்டுள்ளது. இது முன்
விரோதம் அது இது என்று மழுப்ப வாய்ப்புள்ளதால், உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வது
News18 Group மற்றும் Reliance Industries Limited இரண்டிலும் இருக்கும் உயர் அதிகாரிகள்,
நிர்வாகிகள் மற்றும் grievance Cellக்கு உங்கள் Email முகவரியிலிருந்து இவர்களது பின்புலமான
தி.க பற்றிய இந்து விரோதம் பற்றிய புகாரை அனுப்பி வைக்கவும். – மாரிதாஸ்’ என்று குறிப்பிட்டு
நியூஸ் 18 நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கான மாதிரி கடிதம் ஒன்றை மாரிதாஸ்
பகிர்ந்திருந்தார். நியூஸ் 18 நிறுவனத்தின்கீழ் பணியாற்றுகிறவர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்கள்
மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி அந்த நிர்வாகத்தைக்
கேட்டுக் கொள்வதாக அந்தக் கடிதம் மாரிதாஸால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அந்தச் செய்தியாளர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்து கொள்ள அந்த
கடிதத்தின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது:
அன்புள்ள நியூஸ் 18 குழுவினருக்கு,
தொடர்ந்து தமிழ்நாடு ஊடகங்களை நான் பின்தொடர்ந்து வருகிறேன். உங்கள்

2
தொலைக்காட்சி சேனலின் தமிழ்நாடு ஊடகப் பிரிவுடன் தொடர்புடைய, நான் சேகரித்த சில
விவரங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
கடந்த நான்கு ஆண்டுகளாக பாஜக எதிர்ப்பு மற்றும் ஹிந்து எதிர்ப்பு பிரச்சாரத்தை உங்கள்
தமிழ் ஊடகப் பிரிவு நடத்தி வருகிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என்பதை
அறிய விரும்புகிறேன். இந்த உண்மையை நீங்கள் ஏற்கனவே அறிந்திருந்தால், இது நடக்க
அனுமதிக்கப்பட்டதற்கான காரணத்தை நான் அறிய விரும்புகிறேன்.
நான் சேகரித்திருக்கும் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், அதன்
மூலம் இந்த சூழ்நிலையின் தாக்கத்தை உங்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.
திராவிடர் கழகம் (இனிமேல் தி.க என குறிப்பிடப்படும்) மற்றும் திராவிட முன்னேற்ற கழகம்
(இனிமேல் திமுக என குறிப்பிடப்படும்) ஆகியவற்றின் ஆதரவாளர்களால் உங்களுடைய
தமிழ் ஊடகப் பிரிவு இயக்கப்படுகிறது.
தி.க என்பது பகுத்தறிவு மற்றும் நாத்திகம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஹிந்து எதிர்ப்பு
திட்டங்களைத் தீவிரமாகப் பின்பற்றி வருகின்ற ஓர் இயக்கம். அது ஹிந்து மதத்தைப்
பின்பற்றுகின்ற மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது. இது தமிழ்நாட்டில் நன்கு
அறியப்பட்ட உண்மையாக இருக்கிறது.
குணா என்கிற குணசேகரன்:
திராவிடர் கழகம் (தி.க) இயக்கத்துடன் தீவிரமாக ஈடுபட்டுள்ள கலி பூங்குன்றனின் மருமகன்
இவர்.
ஜீவசகாப்தன்:
மதுரை மாவட்டத்தின் மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான, முன்னாள்
மாவட்ட செயலாளரின் மகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதுகெலும்பாக
ஜீவசகாப்தன் இருக்கிறார். அவரது மனைவி (சமீம் ஜீவா) தி.கவின் தீவிர ஆதரவாளர். அவர்
கடுமையான மற்றும் தீவிர ஹிந்து வெறுப்புக்கு பெயர் பெற்றவர். ஹிந்து விரோத
இயக்கமாக விளங்கும் தி.கவில் ஜீவசகாப்தன் மற்றும் அவரது மனைவி மிகவும் ஈடுபாடு
கொண்டுள்ளனர்.
செந்தில்:
இவருடைய சமூக ஊடக ட்வீட் மற்றும் பதிவுகளை ஆராய்ந்தால், ஹிந்து மதம், இந்தியா
மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர எதிர்ப்பாளராக செந்திலை எளிதில் அடையாளம்
காண முடியும். சீனாவின் 59 மொபைல் செயலிகளைத் தடைசெய்வதில் அரசாங்கத்தின்
முடிவு குறித்து சமீபத்தில்கூட அவர் ட்வீட் செய்திருந்தார்.
ஜான் பால் & கருணாகரன்:
ஜான் பால் மற்றும் கருணாகரன் மூத்த துணை ஆசிரியர், இருவரும் தி.கவின் தீவிர மூத்த
உறுப்பினர்கள்.
பிரகாஷ் பாண்டியன்:
பிரகாஷ் பாண்டியன் நிருபர். தீவிர ஹிந்து வெறுப்பாளர் மற்றும் பெரியாரின் ஆதரவாளர்
ஆவார்.
நியூஸ் 18 தமிழ்நாடு ஊடக பிரிவு சுமார் 70% தி.க மற்றும் தி.மு.க கட்சியின்
ஆதரவாளர்களால் நிரப்பப்பட்டுள்ளது. வெளிப்படையாக தி.மு.கவுடன் இருக்கும் அவர்கள்
கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி இயக்கங்களையும் ஆதரித்து வருகிறார்கள்.
ஹாசீஃப் எம்:

3
தலைமைச் செய்தி நிருபர், தீவிர சிந்தனையாளர், அவர் பிரதமர் நரேந்திர மோடியை
கடுமையாக எதிர்க்கிறார்.
ஹிந்து எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு மற்றும் மோடி எதிர்ப்பு திட்டங்களுடன் இணைந்திருக்கும்
பல மூத்த நிருபர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களை ஒரு ஊடக சேனல் எவ்வாறு
கொண்டிருக்க முடியும்?
இதுபோன்ற மனநிலையுள்ள நபர்களின் இந்த குழுவானது உங்கள் தமிழ்நாடு ஊடகப்
பிரிவில் பாகுபாடற்ற நியமனங்களாக இருப்பதாகத் தெரியவில்லை. இவர்கள்
’பத்திரிகையாளர்கள்’ என்று கருதப்படுகிறார்கள், ஆனால் தி.க மற்றும் தி.மு.க
சித்தாந்தங்களுடன் இணைந்திருக்கிறார்கள். பத்திரிகைத்துறை என்ற பெயரில் அவர்கள்
இணைந்திருக்கும் சித்தாந்தங்களுக்குச் சாதகமான செய்திகளை ஒளிபரப்ப அவர்கள் மிகவும்
தந்திரமாக உங்கள் ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இவர்கள் அவ்வப்போது தி.மு.கவிற்கு எதிரானதாகத் தோன்றுகின்ற செய்திகளை
வெளியிடுவார்கள் என்பது 100% உண்மை. இவர்களின் திட்டம் தமிழ்நாட்டில் மத்திய அரசு
மற்றும் மோடிக்கு எதிரான வலுவான அலைகளை உருவாக்குகிறது என்று நான் உறுதியாக
உணர்கிறேன், நம்புகிறேன். செய்தி நிகழ்ச்சிகளில் பேச்சாளர்கள் நமது பிரதமர் நரேந்திர
மோடி மீது தீவிர வெறுப்பைப் பரப்புகிறார்கள்.
சென்னையில் நடந்த ஒரு சம்பவத்தை நான் மேற்கோள் காட்டுகிறேன். 2018 ஏப்ரலில்,
அரசியல்வாதியும் நடிகருமான எஸ்.வி.சேகரின் வீட்டின் மீது பத்திரிகையாளர்கள் உட்பட
பலரால் கல்லெறியப்பட்டது. அடையாளம் காணப்பட்ட 30 ஊடகவியலாளர்களில் 14 பேர்
நியூஸ் 18 தமிழ் ஊடகம் (பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன), சன் டிவி, தினகரன் மற்றும்
கலைஞர் டி.வி. இந்த நிருபர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்குதலை நடத்தினர்.
இது அனைவருக்கும் தெரிந்ததே.
1. ஜீவசகாப்தன், தயாரிப்பாளர், செய்தி 18,
2. இளையபாரதி, நிருபர், செய்தி 18,
3. வீரமணி, நிருபர், செய்தி 18,
4. டி.பிரகாஷ், மூத்த நிருபர், செய்தி 18,
5. எஸ் விஜய் ஆனந்த், நிருபர், செய்தி 18,
6. கே.சிவராமன், நிருபர் செய்தி 18,
7. எஸ்.விஷ்ணு, நிருபர், செய்தி 18,
8. ஐ.ஆசிப், நிருபர், செய்தி 18,
9. பி.பண்டியராஜா, நிருபர், செய்தி 18,
10. எம்.ஆனந்த்குமார், நிருபர், செய்தி 18,
11. ஆர்.சரவணன், நிருபர், செய்தி 18,
12. எஸ்.அருணாதேவி, அசைன்மென்ட் தயாரிப்பாளர், நியூஸ் 18,
13. டி.காமாட்சி, நியூஸ் 18,
14. ஏ.வினோதினி, ஆசிரியர், நியூஸ் 18
மாநிலம் முழுவதும் உள்ள செய்தி தயாரிப்பாளர்களில் பலரும் தி.க அனுதாபிகள்
என்பதையும், அதன் விளைவாக அவர்கள் ஹிந்து விரோதிகளாக இருக்கிறார்கள்
என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். என்னிடம் மேலும் தகவல்கள்
உள்ளன. மேலும் ஆதாரங்கள் தேவைப்பட்டால் அவற்றை உங்களுக்குக் கொடுக்க நான்

4

தயாராக இருக்கிறேன்.
தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கின்ற இந்த செய்தி தயாரிப்பாளர்கள் ஹிந்து எதிர்ப்பு, மத்திய
அரசு எதிர்ப்பு, மோடி எதிர்ப்பை மட்டும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தி.மு.கவின்
வலுவான ஆதரவாளர்கள். தி.மு.கவை எதிர்க்கின்ற எவரும் இவர்களின் இலக்காக
மாறுகிறார்கள். எடுத்துக்காட்டாக, திரு.ரஜினிகாந்த் தனது அரசியல் நுழைவை அறிவித்த
காலத்திலிருந்து, செய்தி மற்றும் விவாதங்கள் என்ற பெயரில் எதிர்க்கட்சியினருக்கான
பிரச்சாரங்களை நியூஸ் 18 தமிழ் சேனல் முடிந்தவரை வைக்கிறது. எனவே இது மோடியை,
இந்தியாவை அல்லது ஹிந்து மதத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, தி.மு.கவுக்கு எதிராக
இருப்பவர்களை அல்லது எதிராகப் பேசுபவர்களை எதிர்ப்பதும், அடக்குவதும் ஆகும்.
தி.மு.க கட்சியின் தாய் தி.க. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு தி.க தீவிரமாகப்
பணியாற்றி வருகிறது. தற்போதைய செய்தி தயாரிப்பாளர்கள் அனைவரும் தி.க.வின்
ஆதரவாளர்கள். எனவே இந்த தி.க / தி.மு.க பிரச்சாரம் நன்கு திட்டமிடப்பட்டு
வேண்டுமென்றே நியூஸ் 18 தமிழ் ஊடக பிரிவில் ஒளிபரப்பப்படுகிறது /
வெளியிடப்படுகிறது.
என்னுடைய கவலை என்ன?
எப்போதுமே சமுதாயத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்ற ஊடகங்களுக்கு,
கேள்விகளைக் கேட்கவும் உண்மையை வெளிக்கொணரவும், சமூகத்தின் முன்பாக அதை
முன்வைக்கவும் முழு சுதந்திரம் தேவை. உண்மையான செய்திகளையும் தகவல்களையும்
ஊடகங்கள் முன்வைக்க வேண்டும். அவை செய்திகளை உருவாக்கி பொய்யான
தகவல்களைக் கொடுக்கக்கூடாது. சில இயக்கங்கள் அல்லது கட்சிகளின் முகவராக
ஊடகத்தால் செயல்பட முடியாது. சில கட்சிகளின் சிந்தனைகளை பொதுமக்களிடம்
திணிப்பதில் ஈடுபட முடியாது.
நாட்டின் நலனில் ஊடகங்களின் பங்கு மிகவும் அவசியம் என்பதை உங்கள் கவனத்திற்கு
கொண்டு வருகிறேன். ஆனால் ’செய்தி ஊடகங்கள்’ மற்றும் ’பத்திரிகையாளர்கள்’ என்று
உங்களை அழைத்துக் கொள்வதன் மூலம், நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சிக்காக
பத்திரிகையாளர்களாக பணியாற்றாதவர்களை, குறிப்பிட்ட சித்தாந்தங்கள் மற்றும் அந்த
சித்தாந்தங்களுடன் தொடர்புடைய கட்சிக்காகப் பணியாற்றுகின்றவர்களைப்
பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இது பத்திரிகைத் துறைக்கு அவமானம், இது உங்கள் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு
உட்படுத்துவதாக இருக்கிறது.
இந்த தகவல்களும் உண்மைகளும் உங்களுக்குத் தெரியுமா என்பதுதான் எனது கேள்வியும்
கவலையுமாக இருக்கிறது. இந்திய குடிமகனாக, உங்களிடமிருந்து பொருத்தமான பதிலை
நான் எதிர்பார்க்கிறேன். இதை நீங்கள் கவனித்து, உங்களுடைய ஊடகங்களில் பத்திரிகைத்
துறையின் புனிதத்தை பராமரிப்பதற்கான சரியான நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நான்
நம்புகிறேன். தேவைப்பட்டால் மேலதிக தகவல்களை உங்களுக்கு வழங்குவதில் நான்
மகிழ்ச்சியடைவேன், இது தமிழ்நாட்டின் நலனுக்கானதாகும்.

தங்கள் உண்மையுள்ள
தொலைக்காட்சி ஊடகங்களில் பணிபுரிபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை, அவர்களுடைய
நிறுவனப் பணியுடன் இணைத்து வைத்துப் பேசுவதற்கு சற்றும் தயங்காத மாரிதாஸின்

5
கடிதத்தில், பாஜக எதிர்ப்பு, ஹிந்து எதிர்ப்பு, எஸ்.வி.சேகர் வீடு மீதான தாக்குதல்கள் சுட்டிக்
காட்டப்படுவதோடு, அந்த செய்தியாளர்கள் செய்த மிகப் பெரிய தவறுகளாக மோடியை
எதிர்ப்பதும், தி.மு.கவிற்கு ஆதரவாக இருப்பதும் முன்வைக்கப்படுகின்றன. இது போன்ற
நிகழ்வுகள் நியூஸ் 18 நிர்வாகத்திற்குத் தெரியாமல் இருப்பதாகவும், அவற்றை அவர்களுக்கு
வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற தொனியுடன் இருக்கின்ற அந்தக் கடிதத்தில், அந்த
நிர்வாகத்தின் கீழ் பணிபுரிகின்ற செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற
வேண்டுகோளும் முன்வைக்கப்படுகின்றது. சர்ச்சையின் இறுதியில், அந்த தொலைக்காட்சி
நிர்வாகத்தால் மாரிதாஸ் மூலமாக வைக்கப்பட்ட வேண்டுகோள் மறைமுகமாக நிறைவேற்றி
வைக்கப்படுகின்றது. ஆக அந்த தொலைக்காட்சி நிறுவனத்தை ஏமாற்றி வேலை செய்து
வந்தவர்களை நிர்வாகத்திற்கு அடையாளம் காட்டி, நடவடிக்கை எடுக்க வைத்தது போன்ற
நாடகத்தை ஒரு கும்பல் மிக அருமையாகத் திட்டமிட்டு நிறைவேற்றிக் காட்டியிருப்பது
தெளிவாகத் தெரிகிறது. ஒருவேளை இவர்கள் அனைவரையும் பணியிலிருந்து
வெளியேற்றுவதற்கான/வெளியேற வைப்பதற்காகத் தீட்டப்பட்ட திட்டம் இவ்வாறாக மாரிதாஸ்
மூலம் அரங்கேற்றப்பட்டதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை. இப்போது மத்திய அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத் ஃபேஸ்புக் நிறுவனத் தலைவருக்கு எழுதியிருக்கும் கடிதம், மாரிதாஸின்
கடிதம் தோன்றிய இடத்தைக் காட்டுவதாக இருக்கிறது.
ஃபேஸ்புக் இந்தியா நிறுவனம் பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்படுவதாக அண்மையில்
எழுந்திருக்கும் சர்ச்சையின் பின்னணியில், மோடியின் தலைமையிலான மத்திய
அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக அங்கம் வகிக்கின்ற ரவிசங்கர்
பிரசாத், 2020 செப்டம்பர் 1 அன்று ஃபேஸ்புக் நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக
அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு, நியூஸ் 18 நிர்வாக குழுவினருக்கு கடிதம் எழுதி
சர்ச்சையைத் துவக்கி வைத்த மாரிதாஸைப் போல, கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடிதத்தில்
உள்ள விவரங்கள் மாரிதாஸின் கடிதத்தில் எழுதியிருந்தவைக்கு சற்றும் சளைத்தவையாக
இருக்கவில்லை. ஃபேஸ்புக் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் மீதான
ரவிசங்கர் பிரசாத் முன்வைத்திருக்கும் புகார் பட்டியல், நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில்
பணிபுரிந்தவர்கள் மீது மாரிதாஸ் வைத்த குற்றச்சாட்டுக்களை அடியொற்றியே இருக்கிறது.
‘சமுதாயத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்ற ஊடகங்களுக்கு, கேள்விகளைக்
கேட்கவும் உண்மையை வெளிக்கொணரவும், சமூகத்தின் முன்பாக அதை முன்வைக்கவும்
முழு சுதந்திரம் தேவை. உண்மையான செய்திகளையும் தகவல்களையும் ஊடகங்கள்
முன்வைக்க வேண்டும். அவை செய்திகளை உருவாக்கி பொய்யான தகவல்களைக்
கொடுக்கக்கூடாது. சில இயக்கங்கள் அல்லது கட்சிகளின் முகவராக ஊடகத்தால் செயல்பட
முடியாது. சில கட்சிகளின் சிந்தனைகளை பொதுமக்களிடம் திணிப்பதில் ஈடுபட முடியாது.
நாட்டின் நலனில் ஊடகங்களின் பங்கு மிகவும் அவசியம் என்பதை உங்கள் கவனத்திற்கு
கொண்டு வருகிறேன்’ என்று ஊடகதர்மம் குறித்து மிக நீளமான வியாக்கியானத்தை எழுதிய
மாரிதாஸைப் போலவே, ‘நாடு கடந்த டிஜிட்டல் தளமான ஃபேஸ்புக், நியாயமானதாகவும்,
நடுநிலையாகவும் இருப்பதோடு, மாறுபட்ட நம்பிக்கைகள் மற்றும் சித்தாந்தங்களைக்
கொண்டிருப்பவர்களால் அவ்வாறு காணப்படுவதாகவும் இருக்க வேண்டும். எந்தவொரு
நிறுவனத்திலும் பணிபுரிகின்ற தனிநபர்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக்
கொண்டிருக்கலாம். ஆனால் அது பொதுக்கொள்கைகள் மற்றும் அமைப்பின் செயல்திறன்
ஆகியவற்றின் மீது எந்தவிதமான தாக்கத்தையும் கொண்டிருக்கக்கூடாது’ என்று அமைச்சர்

6

ரவிசங்கர் பிரசாத்தும் விளக்கி அறிவுரை தருகிறார்.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவருக்கு எழுதிய
கடிதத்தின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது.

ரவிசங்கர் பிரசாத்
அமைச்சர்
சட்டம் & நீதி, தகவல் தொடர்பு மற்றும்
எலக்ட்ரானிக்ஸ் & தகவல் தொழில்நுட்பம்
இந்திய அரசு
புது தில்லி, 2020 செப்டம்பர் 1

அன்புள்ள திரு. மார்க் ஜுக்கர்பெர்க்,
இந்தியாவிலிருந்து வாழ்த்துக்கள்!
உலகளாவிய தொற்றுநோயை நாம் அனைவரும் கூட்டாக எதிர்த்துப் போராடி வருகின்ற
இந்த நேரத்தில், உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்விற்கும் எனது
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களிடம் உள்ள கடுமையான வேதனைகளை எழுப்புவதற்காக இந்த கடிதத்தை நான்
எழுதுகிறேன். இவற்றில் சிலவற்றை கடந்த காலத்தில் ஃபேஸ்புக்கின் மூத்த அதிகாரிகளின்
கவனத்திற்கு நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.
தகவல் இணைப்பின் பொதுவான நன்மைகளைப் பற்றி, குறிப்பாக உலகளாவிய சமூகத்திற்கு
நீங்கள் வழங்கியிருக்கும் தயாரிப்புகளின் சூழலில், நீங்களும் உங்கள் மூத்த நிர்வாகமும்
பேசுவதை அடிக்கடி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சமூகங்களை உருவாக்குவதற்கும்,
உலகை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கும் மக்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்

7
என்பதே ஃபேஸ்புக்கின் கூறப்பட்ட நோக்கமாக இருக்கிறது. உலகெங்கிலும் இணைக்கப்பட்ட
சமூகங்களை அடைவதற்கான இந்த குறிக்கோள் குறித்த முதன்மையான நகர்வுகளில்
ஒன்றாக உலகளாவிய அளவில் ஃபேஸ்புக் குழுவின் தயாரிப்புகளால் அடையப்பட்டுள்ளவை
இருக்கின்றன.
இருப்பினும், ஃபேஸ்புக்கின் கூறப்பட்ட இலக்குகளை அடைவதற்கு முரணான சிலவற்றை
கடந்த சில மாதங்களாக நாங்கள் காண்கிறோம்.
இந்தியாவில் 2019 பொதுத் தேர்தல்களின் போது, பக்கங்களை நீக்குவது அல்லது அவற்றின்
வரம்பைக் கணிசமாகக் குறைப்பது மட்டுமல்லாமல், வலது-மைய சித்தாந்தத்திற்கு
ஆதரவான பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையீடு அல்லது முறையீடு செய்வதற்கான
உரிமையைக் குறிப்பிடும் வகையில் குறைப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சி ஃபேஸ்புக்
இந்தியா நிர்வாகத்திடம் இருந்திருப்பதாக நான் அறிய வருகிறேன். ஃபேஸ்புக் நிர்வாகத்திற்கு
எழுதப்பட்ட மின்னஞ்சல்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்பதையும் நான்
அறிவேன். உங்கள் ஃபேஸ்புக் இந்தியா குழுவில் உள்ள தனிநபர்கள் கொண்டிருக்கின்ற
ஆதிக்க அரசியல் நம்பிக்கைகளின் நேரடி விளைவாகவே, மேலே குறிப்பிடப்பட்ட ஒரு
சார்பான மற்றும் செயலற்ற தன்மை இருக்கின்றது.
நாடு கடந்த டிஜிட்டல் தளமான ஃபேஸ்புக், நியாயமானதாகவும், நடுநிலையாகவும்
இருப்பதோடு, மாறுபட்ட நம்பிக்கைகள் மற்றும் சித்தாந்தங்களைக் கொண்டிருப்பவர்களால்
அவ்வாறு காணப்படுவதாகவும் இருக்க வேண்டும். எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரிகின்ற
தனிநபர்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கொண்டிருக்கலாம்
என்றாலும், அது பொதுக்கொள்கைகள் மற்றும் அமைப்பின் செயல்திறன் ஆகியவற்றின் மீது
எந்தவிதமான தாக்கத்தையும் கொண்டிருக்கக்கூடாது. இந்திய நிர்வாக இயக்குனர் முதல்
மற்ற மூத்த அதிகாரிகள் வரையிலும், ஃபேஸ்புக் இந்தியா குழுவானது குறிப்பிட்ட அரசியல்
நம்பிக்கையைச் சேர்ந்தவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக இருக்கிறது என்று
நம்பகமான ஊடகச் செய்திகளிலிருந்து தெரிய வருகிறது. இந்த அரசியல் முன்னோக்கு
கொண்டவர்கள் அடுத்தடுத்து வந்திருக்கும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களில்
மக்களால் பெருமளவில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். அனைத்து ஜனநாயக சட்டபூர்வமான
தன்மையையும் இழந்த பின்னரும், முக்கியமான சமூக ஊடக தளங்களின் முடிவெடுக்கும்
அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமாக, இந்தியாவின் ஜனநாயகச்
செயல்முறைகளுக்கு அவர்கள் அவதூறு இழைக்க முயல்கின்றனர். உள்பிளவுகள் மற்றும்
சமூக இடையூறுகளைத் தூண்டுவதற்கான அவர்களுடைய ஆயுதக் களஞ்சியத்தில் சமீபத்திய
கருவியாக ஃபேஸ்புக் மாறியிருக்கிறது.
ஃபேஸ்புக் இந்தியாவில் பணியாற்றுகின்ற போது, முக்கியமான பதவிகளை நிர்வகிக்கும்
போது பிரதமர், இந்திய மூத்த அமைச்சர்கள் மீது ஃபேஸ்புக் ஊழியர்கள் அவதூறுகளைப்
பதிவு செய்வது பிரச்சனைக்குரியதாக இருக்கிறது. தனிநபர்களின் சார்பு அந்த தளத்தின்
உள்ளார்ந்த சார்புகளாக மாறும்போது, அந்தப் பிரச்சனை இரட்டிப்பாகின்றது. லட்சக்கணக்கான
மக்களின் பேச்சு சுதந்திரத்தை, தனிநபர்களின் அரசியல் சார்பு தடைசெய்வதை
ஏற்றுக்கொள்ள முடியாது.
எவ்வாறாயினும், சமீபத்திய ஊடக செய்திகளைப் பார்க்கும்போது, ஆழ்ந்து
வேரூன்றியிருக்கின்ற இவர்கள் இந்தியாவில் உள்ள ஒரு பக்கத்தினருக்கான சுருங்கிவரும்
இடத்தைப் பற்றி திருப்தி அடையவில்லை என்பதும், அதை முழுவதுமாகத் தடுத்து நிறுத்த

8
அவர்கள் விரும்புவதும் தெரிய வருகிறது. சமீபத்தில் அநாமதேய, ஆதாரங்கள்
அடிப்படையிலான செய்திகள் அதிகரித்து வருவதற்கான காரணம், உங்கள் நிறுவனத்திற்குள்
நடைபெறுகின்ற கருத்தியல் மேலாதிக்கத்திற்கான உள்அதிகாரப் போராட்டத்தைத் தவிர
வேறில்லை.
மாற்று யதார்த்தத்தைச் சித்தரிக்கும் முயற்சிகளுக்காக, உங்கள் நிறுவனத்தில் இருந்து
வெளியாகின்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கசிவுகளால் உண்மைகள் எவ்வாறு சுற்றி
விடப்படுகின்றன என்பதை வேறு எந்த தர்க்கம் கொண்டும் விளக்க முடியாது. இந்தியாவின்
அரசியல் செயல்பாட்டின் மீது, வதந்திகள், கிசுகிசுக்கள் மற்றும் மறைமுகப் பேச்சுக்கள்
மூலமாக நடத்தப்படுகின்ற இந்த தலையீடு கண்டிக்கத்தக்கது. ஃபேஸ்புக் ஊழியர்களில்
உள்ள ஒரு குழுவினர் சர்வதேச ஊடகங்களுடன் கொண்டிருக்கும் இந்த கூட்டு,
எங்களுடைய மாபெரும் ஜனநாயகத்தின் ஜனநாயக வழிமுறைகள் மீது மோசமான சுயநலன்
கொண்டவர்கள் பழிதூற்றும் வகையில் செயல்படுவதற்கான சுதந்திரத்தை அளிக்கிறது.
சமூக ஒழுங்கைக் குலைப்பது, மக்களை ஒன்று சேர்த்து வன்முறைக்கு அவர்களைத்
திரட்டுவது ஆகியவற்றை ஒரே நோக்கமாகக் கொண்ட அராஜக மற்றும் தீவிரவாதக்
குழுக்களால் ஃபேஸ்புக் பயன்படுத்தப்பட்ட பல நிகழ்வுகளும் சமீபத்தில் நடந்திருக்கின்றன
என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இருப்பினும், அத்தகைய குழுக்களுக்கு எதிராக
எந்தவொரு அர்த்தமுள்ள நடவடிக்கையையும் இதுவரையிலும் நாங்கள் காணவில்லை.
இந்தியாவில் அரசியல் வன்முறை மற்றும் உறுதியற்ற தன்மையைத் தூண்டி விட்டு,
ஊக்கமளித்து வருகின்ற அதே குழுக்களாலேயே இந்த நடவடிக்கையும் தடுக்கப்படுகிறதா?
உண்மை சரிபார்ப்பை அவுட்சோர்சிங் செய்து மூன்றாம் தரப்பு உண்மை-சரிபார்ப்பவர்களிடம்
தருவது ஃபேஸ்புக்கிடம் உள்ள முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. தவறான
தகவல்களிடமிருந்து பயனர்களைப் பாதுகாப்பதற்கான தனது பொறுப்பை எவ்வாறு ஃபேஸ்புக்
நிறுவனம் நீக்கிக் கொள்ள முடியும்? ஆனால் அதற்குப் பதிலாக நம்பகத்தன்மை இல்லாத
நிழல் அமைப்புகளுக்கு அந்தப் பணியை அவுட்-சோர்ஸ் செய்து வருகிறது. ஆன்-போர்டிங்
உண்மை-சரிபார்ப்பவர்களை மதிப்பீடு செய்பவர்களிடமிருந்து துவங்கி, உண்மை-
சரிபார்ப்பவர்கள் வரைக்கும், பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுகின்ற அரசியல் சார்புகளைக்
கொண்டிருப்பதை இந்தியாவில் பார்க்க முடிகிறது! சமூக ஊடகங்களில் தொடர்ந்து
விழிப்புடன் இருந்து வருகின்ற தன்னார்வலர்கள் இந்த உண்மை-சரிபார்ப்பவர்களை
உண்மையாகச் சரிபார்க்க வேண்டும்! ஆன்-போர்டிங் உண்மை-சரிபார்ப்பவர்கள் பலரைப்
பயன்படுத்திய பிறகும், கோவிட்-19 மற்றும் அதன் பின்விளைவுகள் தொடர்பான தவறான
தகவல்கள் சரிபார்க்கப்படவில்லை. இந்த யதார்த்தங்களை ஃபேஸ்புக் போன்ற ஒரு
அமைப்பால் எவ்வாறு மறந்துவிட முடியும்?
பரந்த பயனர் தளத்தைக் கொண்ட நாடுகடந்த டிஜிட்டல் தளமானது, உள்ளூர்
உணர்திறன்களிலிருந்து விடுபட முடியாது. குறிப்பிட்டதொரு நாட்டில் உள்ள சமூக
விதிமுறைகளின்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய குறிப்பிட்டதொரு செயல், வேறொரு நாட்டின்
சமூக விதிமுறைகளுக்கு உகந்ததாக இருக்காது. ஃபேஸ்புக் சமூகத்தின் வழிகாட்டுதல்கள்
பன்முகத்தன்மையின் இந்த அம்சத்தை ஏற்றுக் கொண்டு, அதனை மதிக்க வேண்டும்.
இந்தியாவின் சமூக, மத, கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை மதிக்கும்
வகையில், நாடுகளுக்குத் தக்கவாறு சமூக வழிகாட்டுதல்களை ஃபேஸ்புக் முன்வைக்க
வேண்டும்.

9
மக்களின் வெளிப்பாட்டை ஜனநாயகமயமாக்கவும், லட்சக்கணக்கான சாதாரண குடிமக்கள்
தங்களது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தவும், இணைக்கவும், சமூகங்களை
உருவாக்கவும், கூட்டுறவு கொள்ளவும், தகவல் தொடர்பு கொள்ளவும் ஒரு தளத்தை
வழங்குவதில் ஃபேஸ்புக் புதிய பரிசோதனைக் களமாக இருந்து வருகிறது. சுதந்திரமான
பேச்சை வெறுத்து, ஒற்றை உலகப் பார்வையைச் செயல்படுத்த முயற்சிக்கின்ற,
பன்முகத்தன்மையை நிராகரிக்கின்ற லாபியால் இந்த பரிசோதனை கடத்திச் செல்லப்பட
அனுமதிக்கக்கூடாது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமாக இருக்க விரும்புகிறேன்.

Yours truly

(Ravi ShankarPrasad)

திரு. மார்க் ஜுக்கர்பெர்க்
தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
ஃபேஸ்புக் இன்க்.
1 ஹேக்கர் வே, மென்லோ பார்க்
கலிபோர்னியா 94025

ஃபேஸ்புக் இந்தியா நிறுவனத்தைச் சார்ந்த அங்கி தாஸ் தங்களுடைய நிறுவன உள்வட்டத்திற்குள்
பாஜகவிற்கு ஆதரவாக வெளியிட்ட செய்திகளை வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளிக் கொணர்ந்த பிறகு,
அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் மீதான பாஜகவின் கோபம் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின்
கடிதம் மூலமாக இவ்வாறு வெடித்திருக்கிறது. அதனையே தன்னுடைய கடிதத்தில் இருக்கும்
‘வதந்திகள், கிசுகிசுக்கள் மற்றும் மறைமுகப் பேச்சுக்கள் மூலமாக இந்திய அரசியல்
செயல்பாட்டின் மீது, நடத்தப்படுகின்ற இந்த தலையீடு கண்டிக்கத்தக்கது. ஃபேஸ்புக் ஊழியர்களில்
உள்ள ஒரு குழுவினர் சர்வதேச ஊடகங்களுடன் கொண்டிருக்கும் இந்த கூட்டு, எங்களுடைய

10
மாபெரும் ஜனநாயகத்தின் ஜனநாயக வழிமுறைகள் மீது மோசமான சுயநலன் கொண்டவர்கள்
பழிதூற்றும் வகையில் செயல்படுவதற்கான சுதந்திரத்தை அளிக்கிறது’ என்ற வாசகங்கள்
அங்கிதாஸ் தொடர்பாக எழுந்திருக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாகவே இந்தக் கடிதம் மத்திய
அமைச்சரால் எழுதப்பட்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நியூஸ்18 தமிழ் ஊடகப் பிரிவு தி.க மற்றும் தி.மு.க சார்ந்தவர்களின் ஆதிக்கத்தில் இருப்பதாக
குற்றம் சாட்டிய மாரிதாஸிற்கு இணையாக, ரவிசங்கர் பிரசாத்தும், ‘நிர்வாக இயக்குனர் முதல்
மற்ற மூத்த அதிகாரிகள் வரையிலும், ஃபேஸ்புக் இந்தியா குழுவானது குறிப்பிட்ட அரசியல்
நம்பிக்கையைச் சேர்ந்தவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக இருக்கிறது, இவ்வாறான அரசியல்
முன்னோக்கு கொண்டவர்கள் அடுத்தடுத்து வந்திருக்கும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களில்
மக்களால் பெருமளவில் தோற்கடிக்கப்பட்டு, அனைத்து ஜனநாயக சட்டபூர்வமான தன்மையையும்
இழந்த பின்னரும், முக்கியமான சமூக ஊடக தளங்களின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் ஆதிக்கம்
செலுத்துவதன் மூலமாக, இந்தியாவின் ஜனநாயகச் செயல்முறைகளுக்கு அவர்கள் அவதூறு
இழைக்க முயற்சிக்கின்றனர்’ என்று குற்றம் சுமத்துகின்றார். சீன செயலிகளைத் தடை செய்த
மத்திய அரசைக் கிண்டல் செய்து பதிவிட்டதாக செந்தில் மீது குற்றம் சுமத்துகின்ற மாரிதாஸ்,
‘இவர்களின் திட்டம் தமிழ்நாட்டில் மத்திய அரசு மற்றும் மோடிக்கு எதிரான வலுவான
அலைகளை உருவாக்குகிறது என்று நான் உறுதியாக உணர்கிறேன், நம்புகிறேன். செய்தி
நிகழ்ச்சிகளில் பேச்சாளர்கள் நமது பிரதமர் நரேந்திர மோடி மீது தீவிர வெறுப்பைப் பரப்புகிறார்கள்’
என்று குற்றம் சுமத்துவதற்கு இணையாக ‘ஃபேஸ்புக் இந்தியாவில் பணியாற்றுகின்ற போது,
முக்கியமான பதவிகளை நிர்வகிக்கும் போது பிரதமர், இந்திய மூத்த அமைச்சர்கள் மீது ஃபேஸ்புக்
ஊழியர்கள் அவதூறுகளைப் பதிவு செய்வது பிரச்சனைக்குரியதாக இருக்கிறது. தனிநபர்களின்
சார்பு அந்த தளத்தின் உள்ளார்ந்த சார்புகளாக மாறும்போது, அந்தப் பிரச்சனை இரட்டிப்பாகின்றது.
லட்சக்கணக்கான மக்களின் பேச்சு சுதந்திரத்தை, தனிநபர்களின் அரசியல் சார்பு தடைசெய்வதை
ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று பொங்கி எழுகிறார் ரவிசங்கர் பிரசாத்.
ஹாசீஃப், குணசேகரன், செந்தில், ஜீவசகாப்தன் ஆகியோரை நியூஸ் 18 தமிழ்
தொலைக்காட்சியிலிருந்து வெளியேற்றிட மாரிதாஸின் கடிதம் செய்த வேலையை, மத்திய
அமைச்சர் எழுதிய கடிதம் மீண்டும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்குள் நிகழ்த்திக் காட்டுமா என்பதைப்
பொறுத்திருந்து பார்க்கலாம்.

தா.சந்திரகுரு