tamilnadu

img

ரயில்வேயின் இரண்டு வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு

இந்திய ரயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை குத்தகை முறையில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முயன்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய ரயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார்களை வைத்து  ரயில்களை இயக்க  ரயில்வே வாரியத்தலைவர் வி.கே. யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 இதுதொடர்பாக பேசிய ரயில்வே அதிகாரி ஒருவர், ஆரம்ப கட்டமாக சுற்றுலா மற்றும் ஐஆர்சிடிசி  ஆகியவற்றுக்கு தலா ஒரு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இதற்காக தனியாரிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெறவும் முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் தனியார் மூலமாக இயக்கப்படும் ரயில்கள் கூட்டம் குறைந்த அல்லது முக்கியமான சுற்றுலாத்தலங்களுக்கு இயக்க அனுமதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக அதுபோன்ற வழித்தடங்களை அடையாளம் காணும் பணிகள் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.