tamilnadu

img

திரிபுரா பாஜக முதல்வரின் உளறலை சகிக்க முடியவில்லை... சொந்தக் கட்சி எம்எல்ஏக்களே 7 பேர் போர்க்கொடி

அகர்தலா:
திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் வெற்றிபெற்ற எம்எல்ஏ-க் களில் பிப்லப் குமார்தான் மிகப்பெரிய பணக்காரர். அதனாலேயே முதல்வர் பதவியிலும்அவர் அமர்த்தப்பட்டார்.ஆனால் ஆரம்பம் முதலேஎதையாவது உளறி சர்ச்சையில் சிக்குவது முதல்வர் பிப்லப் குமாரின் வாடிக்கையாகி விட்டது. சட்டமன்ற கன்னிப் பேச்சின்போது, “மகாபாரத காலத்தில் சேட்டிலைட், இண்டர்நெட் வசதிகள் இருந்தது”என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.

அதைத்தொடர்ந்து, “ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தது சரி, ஆனால், டயானா ஹெய்டனுக்கு எதற்காக உலக அழகிப்பட்டம் கொடுத்தார்கள்?” என்று கேட்டதாகட்டும், “சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும்;வேலையில்லாத இளைஞர் கள் பீடா கடை வைக்க வேண்டும்” என்று ‘ஆலோசனைகள்’ வழங்கியதாகட்டும், தானொரு முதல்வர் என்பதைமறந்து உளறுவதையே வாடிக்கையாக்கினார். “குளத்தில் வாத்துகள் நீந்துவதால் தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும், தண்ணீர் சுத்தமாகும்” என்று பிப்லப் கூறியது, விஞ்ஞானிகளுக்கே புரியாத மர்மமாகபேசப்பட்டது. அண்மையில்கூட, வீடுகளில் விவேகானந் தர் படம் இருந்தால் 35 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சியை அசைக்க முடியாது என்று பேசியிருந்தார்.இந்நிலையில்தான், பிப் லப் குமாரின் ‘மோசமான தலைமை’ மற்றும் ‘ஆதிக்க செயல்பாடு’ ஆகியவற்றை சகிக்க முடியவில்லை என்றுசுதீப் ராய் பர்மன், சுஷாந்தா சவுத்ரி, பரிமல் டெப் பார்மா,டி.சி. ராங்க்வால், ஆஷிஷ் தாஸ், அதுல் தேவ் பர்மா, பர்ப் மோகன் திரிபுரா மற்றும்ராம் பிரசாத் பால் உள்ளிட்ட7 எம்எல்ஏ-க்கள் புகார் கூறியுள்ளனர். பிப்லப்பை மாற்ற வேண்டும் என்று தில்லியில் முகாமிட்டுள்ளனர்.