tamilnadu

img

தோழர் கே.வைத்தியநாதனுக்கு புதுச்சேரியில் அஞ்சலி

புதுச்சேரி:
தொழிற் சங்கத்தின் மூத்த முன் னோடிகளில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான  தலைவருமான வைத்தியா என்கின்ற வைத்தியநாதன் மறைவையொட்டி  புதுச்சேரியில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

ரெட்டியார் பாளையத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச குழு அலுவலகத் தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் பிரதேச செயலாளர் ஆர். ராஜாங் கம் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் வெ. பெருமாள், புதுச்சேரி செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி, பிரதேச குழு உறுப்பினர் கலியமூர்த்தி,  உள்ளிட்ட பிரதேச குழு உறுப்பினர்கள், இடைக் குழு  செயலாளர்கள், கட்சி ஊழியர்கள் பங்கேற்று வைத்தியநாதன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக அவருக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

சிஐடியு அலுவலகம்
முதலியார்பேட்டை சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு சிஐடியு பிரதேச செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிஐடியு நிர்வாகிகள் கலியமூர்த்தி, மது, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கொளஞ்சியப் பன் உள்ளிட்ட தொழிலாளர்கள் வைத் தியநாதன் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

;