tamilnadu

பாதுகாப்பாக இருக்க தில்லிக்குச் செல்ல மாநில அரசு உதவ வேண்டும்... ஹத்ராஸ் பெண்ணின் குடும்பம் வேண்டுகோள்

துதில்லி:
நாங்கள் பாதுகாப்பாக இருக்க தில்லிக்குச் செல்ல விரும்புகிறோம். இதற்குமாநில அரசு உதவ வேண்டும் என்று ஹத்ராஸ் பெண்ணின் குடும்பம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உயர்சாதி குண்டர்களால் 19 வயது தலித் இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. பெண்ணின் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட இளம்பெஙண் ணின் குடும்பத்திற்கு உயர்சாதிக்கும்பலால் தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் யோகியின் பாஜக அரசும்குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தில்லிக்குமாற்றப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இதுகுறித்து பெண்ணின் சகோதரர் வெள்ளிக்கிழமையன்று ஏ.என்.ஐ. செய்திநிறுவனத்திடம் கூறுகையில், வழக்கு தில்லிக்கு மாற்றப்பட வேண்டும் என்று குடும்பம் விரும்புகிறது. நாங்கள் அங்குமாற விரும்புகிறோம். தங்கள் கிராமத்திலிருந்து வெளியேற மாநில அரசு உதவ வேண்டும்.நாங்கள் அவர்களைச் சார்ந்து இருக்கிறோம். நாங்கள் எங்கிருந்தாலும் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.