tamilnadu

img

மனித உரிமைகளை மீறாமல் இருக்க வீரர்களுக்கு அறிவுறுத்தப்படும்... புதிய ராணுவத் தளபதி பேச்சு

புதுதில்லி:
இந்திய ராணுவத்தின் 28 ஆவதுதலைமைத் தளபதியாக பொறுப்பேற்ற மனோஜ் முகுந்த் நரவானே, தில்லிஇந்தியா கேட்டில் உள்ள போர்நினைவுச்சின்னத்தில் மலர் வளையம்வைத்து மரியாதை செலுத்தி,அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம்கூறுகையில்,  பாகிஸ்தான் எல்லைப்புற பதற்றம் ஒருபுறம் இருந்தாலும் இனிமேல், சீன எல்லையில் அதிக கவனம்செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எந்தவிதமான சூழலிலும் நாட்டைகாக்கும் பணியில் ராணுவத்தை தயார் நிலையில் வைப்பதே திட்டம். ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமைஅளிக்கப்படும்.மனித உரிமைகள் மீறப்படாமல் இருக்க ராணுவம்அறிவுறுத்தப்படும். மனித உரிமைகளை மதிக்க சிறப்பு கவனம் செலுத்துவோம். தீவிரவாதிகள் பிரச்சனை தொடர்ந்தால், எங்கிருந்தாலும் அவர்களை தாக்குவதற்கான முழு உரிமை இந்தியாவுக்கு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
 

;