tamilnadu

img

இவர்களை இப்படித்தான் சுட்டுத்தள்ள வேண்டும்... பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் சொல்கிறார்

புதுதில்லி:
சிஏஏ-வுக்கு எதிராக பேரணி சென்றவர்கள் மீது இந்துத்துவா பயங்கரவாதி ராம்பக்த் கோபால் நடத்திய துப்பாக்கிச் சூட்டை, பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் வரவேற்றுள்ளார்.“இந்த துப்பாக்கிச் சூட்டை நான் கண்டிக்க மாட்டேன். ஏனென்றால், இவர்னளை இப்படித்தான் சுட்டுத் தள்ள வேண்டும்” என்று சங்கீத் சோம் கூறியுள்ளார்.

“தில்லி ஷாகீன் பாக் பகுதியில் போராடும் பெண்களுக்கு வேலை எதுவும் இல்லை. அவர்கள் தங்கள் வீட்டில் எதுவும் சமைப்பது இல்லை. அதனால் அவர்கள் தினமும் போராடுகிறார்கள். அவர்களுக்கு எங்கிருந்தோ பணம் வருகிறது. இல்லையென்றால் அவர்கள் இப்படி போராட்டம் செய்து இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு யாரோ பின்னிருந்து உதவுகிறார்கள். அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். ஷர்ஜீல் இமாம் போன்ற நபர்கள் இந்தியாவை உடைக்க வேண்டும் என்று திட்டமிட்டுவருகிறார்கள். அவரைப் போன்றவர்களை எல்லாம் நடு ரோட்டில் மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்ல வேண்டும். அப்போதுதான் இது போன்ற போராட்டங்களை கட்டுப்படுத்த முடியும்” என்றும் சங்கீத் சோம் விஷத்தைக் கக்கியுள்ளார்.முசாபர்நகர் வன்முறையின்போது, இஸ்லாமியர்களின் வீடுகளை கொளுத்தி யதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் சங்கீத்சோம் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

;