tamilnadu

img

தீக்கதிர் ஒருவரிச் செய்திகள்

தெலுங்கானாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வீடு இடிந்து விழுந்து விபத்திற்குள்ளா னதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

                                  ***************

தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக முனையம் அமைக்க வேண்டும் என்று  மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

                                  ***************

அக்டோபர் 20 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதிவரை 392 பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

                                  ***************

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை யில் அக்டோபர்  22 ஆம் தேதி நடைபெறுகிறது.

                                  ***************

மேற்கு ரயில்வே வழித்தடத்தில் ஏ.சி. ரயில்கள் உள்பட கூடுதலாக 194 ரயில் சேவைகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

                                  ***************

புதுச்சேரி பிரதேச பொதுமக்களுக்கு இலவச அரிசிக்குபதிலாக பணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.