tamilnadu

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

பவர்கிரிட் கார்ப்பரேஷன் ரூ. 2,048 கோடி லாபம்!
மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்’, சுமார் 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி சொத்துமதிப்பு கொண்ட ‘மகா ரத்னா’ நிறுவனமாகும். நாட்டின், மத்திய மின்பரிமாற்றப் பயன்பாட்டுக்காக செயல்படும் இந்த நிறுவனம், 2020 - 2021 நிதியாண்டின் முதல் காலாண்டில்ரூ. 2 ஆயிரத்து 48 கோடியை நிகரலாபமாக ஈட்டியுள்ளது.

எல்லைப் பாதுகாப்பில் பெண் ராணுவ வீரர்கள்
பாகிஸ்தான் எல்லைகட்டுப்பாட்டு பகுதிகளில், இந்தியா முதல் முறையாக பெண் ராணுவ வீரர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இந்திய ராணுவ வரலாற்றில் காம்பேக்ட் பணிக்காக எல்லையில் பெண்களை பயன்படுத்துவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. கேப்டன் குர்சிம்ரன் கவுர்தலைமையில் மொத்தம் 30 பெண் ராணுவவீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள னர். 

இஐஏ 2020-க்கு எதிராக  குவிந்த கடிதங்கள்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு- 2020 குறித்த மக்கள் கருத்துக் கேட்புக்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமையுடன் (ஆக. 11) முடிவடைந்து ள்ள நிலையில், இதுவரை சுமார் 5 லட்சம் கருத்துக்கள் அரசுக்குவந்துள்ளதாகவும், அவற்றில் பெரும்பா லானவை, இந்த வரைவு கொள்கையை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியே வந்துள்ளன என்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி பீகாரில் தேர்தல்
பீகாரில், 2020 நவம்பர் 28-க்குள் தேர்தல் நடத்தி புதிய அரசு பதவியேற்றாக வேண்டும். ஆனால், பீகாரில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில் தேர்தல் நடைபெறுமா?என்ற சந்தேகம் இருந்து வந்தது. தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. ஆனால், பீகாரில் திட்டமிட்டபடி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

தில்லி பள்ளிகளைக் கூட நிர்வகிக்க முடியாத பாஜக!
பாஜக-வினர் மேயராக இருக்கும் தில்லி மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் முறையாக தருவதில்லை; மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ள நிலையில், பள்ளிகளை பாஜக-வினரால் நடத்த முடியவில்லை என்றால், அவற்றை தில்லி அரசிடம்ஒப்படைத்து விடுமாறு, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா காட்டமாக கூறியுள்ளார்.

பாஜக எம்எல்ஏ  கொரோனா நாடகம்?
கோவாவில், காங்கிரசிலிருந்து பாஜக-வுக்கு தாவிய 10 எம்எல்ஏ-க்களில்வில்பிரெட் டிசா-வும் ஒருவர். இதற்காக தற்போதுதகுதிநீக்க வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், செவ்வாயன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், அதனைத் தள்ளிப்போடும் வகையில், வில்பிரெட் டிசா தனக்குகொரோனா என்று நாடகமாடி மருத்துவ மனையில் சேர்ந்துகொண்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

‘பூஜ்ஜிய’ கல்வியாண்டாக அமைய வாய்ப்பு இல்லை!
கொரோனா தொற்று அச்சம் காரணமாக பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் வரை திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார். அதேநேரம் இந்த கல்வியாண்டு பூஜ்ஜிய கல்வியாண்டாக (Zero Academic Year) அறிவிக்கப்படாது எனவும்நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் களிடம்  அமித் காரே விளக்கியுள்ளார். 

அதி நவீன பீரங்கிகளை நிறுத்தும் சீனா..?
எல்லைப் பகுதியில், டி-72 டி-90 மற்றும்அர்ஜூன் வகை பீரங்கிகளை இந்தியாகுவித்து இருக்கிறது. இவை மலைப்பாங்கான பகுதிகளில் விடவும் தரைப்பகுதி களில்தான் சிறப்பாக செயல்படக் கூடியவை. ஆனால், சீனா மலைப்பகுதிகளில் துல்லியமாக தாக்கக் கூடிய வகையிலான டி-15வகை பீரங்கிகளை திபெத் எல்லை பகுதியில் குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.