சத்தீஸ்கர், மகாராஷ்டிரா எதிர்ப்பு
புதுதில்லி, மே 24- உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு அனு மதித்துள்ள மத்திய அர சுக்கு, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. முறையான செயல்பாட்டு நடைமுறை களை வகுத்து அவற்றை அமல்படுத்தாமல், விமா னம் மற்றும் ரயில் வழி களை மத்திய அரசு திறக் கக்கூடாது என்று சத்தீஸ் கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார். ஊரடங் கால் விமானங்கள் மும்மை விமான நிலையத்தில் தரையிறங்கவோ அல் லது அங்கிருந்து புறப் படவோ முடியாது என்று மகாராஷ்டிர அரசு அறி வித்துள்ளது.
ம.பி. இடைத்தேர்தல் காங்கிரசுக்கு தேர்தல் வேலை!
போபால், மே 24- மத்தியப்பிரதேச மாநி லத்தில், 24 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை ராஜி னாமா செய்ய வைத்து, பாஜக அதிகாரத்திற்கு வந்தது. தற்போது அந்த 24 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்று காங் கிரஸ் கணக்குப் போட் டுள்ளது. இதற்காக தேர் தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை மீண் டும் ஆலோசகராக நிய மித்துள்ளது. கிஷோரும் குவாலியரில் அலுவலகம் அமைத்து பணிகளை துவக்கியுள்ளார்.
ரூ. 1.54 கோடி சொத்துக்களை விற்க முடிவு
திருப்பதி, மே 24- திருப்பதி ஏழுமலை யான் கோயிலுக்கு தமி ழக பக்தா்கள் காணிக்கை யாக அளித்த விவசாய நிலங்கள், வீடு, காலி மனைகள் ஆகியவை குடி யாத்தம், விழுப்புரம், திரு வள்ளூா் உள்ளிட்ட பகுதி களில் உள்ளன. இந்நிலை யில், 1 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான, அந்த 23 அசையா சொத்து களை ஏலம் மூலம் விற் பனை செய்ய கோயில் நிர் வாகம் முடிவு செய்துள் ளது. இதற்காக 2 குழுக் களையும் அமைத்துள்ளது.
சிக்கிமையும் தொற்றியது கொரோனா!
கேங்டோக், மே 24- சீனாவின் வடபகுதி எல்லையில் அமைந்தி ருக்கும் இந்திய மாநிலம் சிக்கிம். எனினும், 60 நாட் களுக்கும் மேலாக கொரோனா தொற்றாமல் சிக்கிம் தப்பித்து வந்தது. இந்நிலையில், கடந்த மே 21 அன்று தில்லியிலி ருந்து வந்த 25 வயது மாண வர் மூலம், கொரோனா சிக்கிமில் முதன்முறை யாக காலடி எடுத்து வைத் துள்ளது. அந்த மாண வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டு இருப்பதாக சுகாதா ரத்துறை செயலர் பெம்பா ஷெரிங் பூட்டியா தெரிவித் துள்ளார்.