tamilnadu

img

தீக்கதிர் முக்கியச் செய்திகள்

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                    ************

ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அம்மாநில அரசு அதிரடி தடைவிதித்துள்ளது.

                    ************

இந்தியா-ரஷ்யா இணைந்து ஏ.கே.47 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

                    ************

உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உலக சுகாதாரஅமைப்பு ஒரு குழுவை அமைத்துள்ளது.

                    ************

வெளிநாடு, வெளிமாநிலங் களில் உள்ள மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் எழுத பரிசீலிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் தெரிவித்துள் ளார்.

                    ************

இந்தோனேசியாவில் முகக் கவசம் அணியாதவருக்கு மாதிரி சவப்பெட்டியில் கிடத்தி நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

                    ************

கேரள மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகளை திறக்க முடிவு செய்திருப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

                    ************

சசிகலா சிறையில் இருந்து இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி யன் கூறினார்.

                    ************

சென்னையில் இருந்து, கோவை, மதுரை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

;