tamilnadu

img

உயிரிழந்தாக கூறப்பட்ட பெண் 5 நாட்களுக்கு பின்   உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

உத்தரபிரதேசத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண் 5  நாட்களுக்கு பின் உயிருடன் வந்ததால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
காசியாபாத்தில் இறந்த நிலையில் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட பெண் உடல் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண்ணின் அடையாளங்களை போலீசார் சமூக வலைதளங்களில்  வெளியிட்டனர். இதனையடுத்து அலிகரைச் சேர்ந்த தாய் ஒருவர், இது காணாமல் போன தனது மகள் 25 வயது வாரிஷா என்று அடையாளம் காட்டினார். மேலும், தனது மகளை  மாமியாரும் கணவரும் தான் கொலை செய்ததாக புகார்  அளித்தார். இதையடுத்து அவரது , கணவரும் மாமியாரும் கடந்த 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலையை கண்டுபிடித்தத்தற்காக காசியாபாத் போலீசார் குழுவிற்கு 15 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் வாரிஷா உயிருடன் திரும்பி வந்துள்ளது போலீசாரிடையே பெரும் குழப்பத்தை  ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரித்ததில் வாரிஷா தானே அலிகார் பஸ் ஸ்டாண்டில் ஒரு லேடி கான்ஸ்டபிளை அணுகி, கடந்த ஜூலை 24 ஆம் தேதி தனது கணவரால் தாக்கப்பட்டதாகக் கூறினார், அதன் பிறகு அவர் தனது கணவரை விட்டு பிரிந்து நொய்டாவுக்குச் சென்றார். அங்கு தொழிற்சாலையில் தங்கி  தினசரி கூலி வேலை செய்ததாக தெரிவித்தார். மேலும் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் பெற்றோரிடம் நான் உயிரோடு  இருக்கிறேன் என கூறவந்தாக தெரிவித்துள்ளார். 
இந்நிலையில் பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் சிறையில் உள்ளனர். இதையடுத்து சூட்கேஸில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட  பெண் யார் என்பது குறித்து  காசியாபாத் போலீசாரால் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 மேலும், தவறான உடலை காட்டியதற்காக வாரிஷாவின் தாய் மற்றும் சகோதரர் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.