5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது
புதுதில்லி, செப்.28- மத்திய பாஜக அரசு ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தை இரண்டாகப் பிரித்து சிதைத்தது. ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி உத்தர விட்டது. இதற்கு காஷ்மீர் மக்களும் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்து வந்த தலைமை நீதிபத் ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, சிறப்பு அந்தஸ்து நீக்கம் தொடர்பான அனைத்து வழக்குகளை யும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என பரிந்துரைத்தார். இந்நிலை யில் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் 5 நீதி பதிகள் கொண்ட அமர்வு சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது. நீதிபதி ரமணா தலைமையிலான இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.கே.காண்ட், ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்குவர். ஐந்து நீதிபதி கள் கொண்ட அமர்வு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து இந்த வழக்குகளை விசா ரிக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.